20091211

டோரா டோரா ...





டோரா டோரா அன்பே டோரா
உனக்கு என்ன அழகே ஊரா
நீ என்ன பூக்களின் தேசமா

டோரா டோரா அன்பே டோரா
மனசும் மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர் சுவாசமா

உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே
என் உயிரின் துண்டாகும்
உன் ஸ்பரிசத்தில் நிறமாற்றங்கள்
என் மேலே உண்டாகும்

உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி
(டோரா டோரா..)

இது இது இது இது காதலா
என் இதயத்திலே ஒரு கூக்குரல்
அது அது அது அது காதல்தான்
என்னை தடவியதே உன் பூவிதழ்

பூக்கூடை போலே தான் என் வசம் மோதினாய்
கூழாங்கல் போலே தான் உடைகிறேன் ஏந்துவாய்
இதயம் எங்கே இயங்கும் என்று
உன்னால் கண்டேன் இப்போதே
(உந்தன்..)

ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில்
உன் மனதினிலே என் ஞாபகம்
சில சில சில சில நேரத்தில்
பொய் கோபத்தை காட்டிடும் உன் முகம்

யார் கண்கள் பார்த்தாலும் உன்னைப் போல் தோன்றுதே
ஐயோப்போ கிறுக்கா நீ உன் மனம் திட்டுதே
எனக்கும் கூட உனக்கு கூட
இது போல் மாற்றம் உண்டாச்சோ
(உந்தன்..)
(டோரா..)






பாடியவர்கள்: பால்ராம், கல்யாணி
படம்: மாசிலாமணி
இசை: D இமான்

0 comments:

Post a Comment