20091213

கண்ணன் வரும்வேளை...




கண்ணன் வரும்வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏற்கநின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விரிக்கும் ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
(கண்ணன் வரும்வேளை..)

வான்கோழி கொள்ளும் ஆசை யாழில் தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது
தேர்க்கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஓரீசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து உளறு மீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை
(கண்ணன் வரும்வேளை..)

பூவாசம் தென்றலோடு சேரவேண்டுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே
தாய்ப்பாசம் பத்துமாதம் பாரம் தாங்குமே வாழ்நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே
(கண்ணன் வரும்வேளை...)



பாடியவர்கள்: மதுஸ்ரீ, அனுராதாஸ்ரீராம்
இசை: யுவன்ஷங்கர்ராஜா



படம்: தீபாவளி

0 comments:

Post a Comment