Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

20100818

கிளிமாஞ்சாரோ ...

கிளிமாஞ்சாரோ 



கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டியப் புடிய்யா
சுக்குமிள்கு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடிய்யா

ஏவாளுக்குத்
தங்கச்சியே யெங்கூடத்தான்
இருக்கா

ஆளுயற ஆலிவ்பழம்
அப்படியே எனக்கா?

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ...நீ

கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

கொடி பச்சையே 
எலுமிச்சையே
உன்மேல் உன்மேல் 
உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை 
ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை!

இனிச்சக்கீரே 
அடிச்சக்கரே
மனச ரெண்டா ஓஹோ 
மடிச்சுக்கிரே 

நான் ஊற வைத்தக்
கனி - என்னை மெல்ல
ஆற வைத்துக் கடி!

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் - நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு - ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்!

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ..நீ


கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி எனைவாசியே

நீ தோல்குத்தாத பலா -  றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா

ஆங்..மரதேகம் நாம் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில்வாசம் நீ

நீ நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
யாரு நான்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சைப் பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

அக்கக்கோ - நான் கின்னிக்கோழி
அப்பப்போ - என்னெப்
பின்னிக்கோ நீ
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோ நீ

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ நீ


பாடியவர்கள் : ஜாவித் அலி,சின்மையி
படம்: எந்திரன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல் : பா.விஜய்

20100814

புதிய மனிதா பூமிக்கு வா...

புதிய மனிதா பூமிக்கு வா



புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வலியாத உயிரோடு
ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால் உலகை மாற்று
எல்லா உயிருக்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு

எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா

நான் கண்டது ஆறறிவு நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி நீ பெற்றது நூறு மொழி
ஈரல், கணையம் துன்பமில்லை இதயக் கோளாறெதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை எந்திரம் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை
இதோ என் எந்திரன் இவன் அமரன்
இதோ என் எந்திரன் இவன் அமரன்

நான் இன்னொரு நான்முகனே
நீ என்பவன் என் மகனே
ஆண் பெற்றவன் ஆண்மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஞான ஒலி

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

பாடியவர்கள்:  ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி. பாலசுப்ரமணியம், கதிஜா ரஹ்மான்
படம்: எந்திரன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடல்: வைரமுத்து

20100813

இவன் பேரைச் சொன்னதும்...

இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்




இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா

உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா



ராஜாத்தி உலோகத்தில்
ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அணையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால் சும்மா விடுமா

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே

ராட்ஷசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே

நான் மனிதன் அல்ல
அஃறிணையின் அரசன் நான்
காமுற்ற கணிணி நான்
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்

எந்திரன்... எந்திரன்
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே

வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை
ரோபோவைப் போ...போ..வென்னாதே

ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா

எந்திரன்... எந்திரன்
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா

படம்: எந்திரன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
பாடல்: வைரமுத்து