20110831

அடியே உன் கண்கள் ரெண்டும்...

அடியே உன் கண்கள் ரெண்டும் Made In Cuba-வா
அதுவே என் தேசம் என்றால் நான் தான் Castro-வா 
அழகே நீ விண்ணில் என்னை ஏற்றும் Nasaa-வா
அடியோடு என்னை சாயத்த Andril பெண்ணே வா 

ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க
ஆராய்ச்சி கூடம் போல கண்ணை மாற்றாதே
வானம் ஒன்றா ரெண்டா நான் யோசிக்க
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே

அடியே உன் கண்கள் ரெண்டும் Made In Cuba-வா
அதுவே என் தேசம் என்றால் நான் தான் Castro-வா 
அழகே நீ விண்ணில் என்னை ஏற்றும் Nasaa-வா
அடியோடு என்னை சாயத்த Andril பெண்ணே வா 

ஆள் கொள்ளும் சேனை கொண்ட ஆயுதங்கள் ஏந்திக் கொண்ட
ஆரம்பித்த யுத்தம் ஒன்று பின்னால் நின்று தாக்காதே

மாவீரா முன்னால் நின்று உள்ளம் என்னும் தீவை வென்று
உன்னை ஆளும் ஆசை உண்டு மாயம் ஆகிப் போகாதே

மறைவேனா நானே நான் தீயை தின்று வாழும் பச்சி
போடி சும்மா வத்தி குச்சி

விடுவேனா நானே நான் கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லும் கட்சி
கண்ணைக் கொத்தும் சைவப் பச்சி

வேட்டைக்காரி காதல் காட்டில் நாளை மீழும் வேங்கை ஆட்சி

பதுங்காமல் என் மீது பாயும் புலி போல ஆகாதே நீயும்
கிளி போல ஆனேனே நானும்
யாழும் வாளும் மோதாமல் மோதும்

அடியே உன் கண்கள் ரெண்டும் Made In Cuba-வா
அதுவே என் தேசம் என்றால் நான் தான் Castro-வா 
அழகே நீ விண்ணில் என்னை ஏற்றும் Nasaa-வா
அடியோடு என்னை சாயத்த Andril பெண்ணே வா

நூற்றாண்டு காலம் முன்பு
மூழ்கிப்போன கண்டம் ஒன்று
நீயும் நானும் அங்கே என்று
வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே

ஏகாந்த தீவில் இன்று 
ஏவாள் போல ஏஞ்சல் ஒன்று
ஏதோ செய்து போகும் என்று 
காற்றும் சொல்லக் கேட்டேனே

அமேசான் காடு 
நாம் ரெண்டே ரெண்டு பட்டாம் பூச்சி
ஆடிப் பார்ப்போம் கண்ணா மூச்சி
ஆரோவில் வீடு 
வா தங்கக்கட்டி செங்கல் வச்சி
தங்கும் ஆசை வந்துடுச்சி

நீ நீலக் கண்ணால் பாலம் போட்ட
தூக்கம் போயே போச்சு

ஓ... விலகாமல் உன்னோடு சேர
இமைக்காமல் உன் தோற்றம் காண
உயிர் கூட உன் கையில் நீங்க
ஆவல் கொண்டேன் நீ என்னைத் தாங்க

அடியே உன் கண்கள் ரெண்டும் Made In Cuba-வா
அதுவே என் தேசம் என்றால் நான் தான் Castro-வா 
அழகே நீ விண்ணில் என்னை ஏற்றும் Nasaa-வா
அடியோடு என்னை சாயத்த Andril பெண்ணே வா


பாடியவர்கள்: உதித் நாராயணன், சாதனா சர்கம்,
படம்: ரௌத்திரம்
இசை: பிரகாஷ் நிக்கி
பாடல்: நா முத்துக்குமார்

20110830

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்...




சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் தவிக்க வைத்தாய் 
எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய் 
கிட்டதட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய் 
திட்டாமல் திட்டித்தான்
உன் காதல் உணர வைத்தாய் 
ரயில் வரும் பாலமாய்
ஐயோ எந்தன் இதயம் 
தடதட தடவென துடிக்க 

நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய் 
வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே 
விழிபார்க்கும் போதே மரமாய்
இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும் 
மனம் நடந்ததை நடிக்கும்
ஒரு குட்டிப்பூனை போல
காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம்
தட்டிப் பார்க்குதே பார்க்குதே
பார்க்குதே தோற்க்குதே

அந்த கடவுள் அடடா ஆண்கள்
நெஞ்சை மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை
கண்டால் உருகிட வைத்தானடி
இந்த மௌனத்தின் மயக்கம்
ரொம்ப பிடிக்குது எனக்கும்
உன் பேச்சும் மூச்சும் என்னைத்
தாக்கி விட்டுச் சென்றதே
நீ விட்டுச் சென்ற ஞாபகங்கள்
பற்றிக் கொண்டதே கொண்டதே
கொண்டதே வென்றதே

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் தவிக்க வைத்தாய் 
எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய் 

பாடியவர்கள்: சின்மயி, சத்யா
படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா.சி
பாடல்: நா முத்துக்குமார்

20110829

மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு ...




மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு 
அது தாக்கி தாக்கி மூர்ச்சையானேனே 
மருகி மருகி தினம் உருகி உருகி 
உன்னைத் தாங்கி தாங்கி மோட்சம் போனேனே 

நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே 
என்ன ஆச்சு ஏதும் எனக்குத் தெரியாதே 

மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு 
அது தாக்கி தாக்கி மூர்ச்சையானேனே 

உலகில் உள்ள அழகை எல்லாம் உன்னில் கண்டேனே 
அணுமின் நிலையம் ஒன்றை உந்தன் கண்ணில் கண்டேனே 
ஓ... ஓ... எதுவும் புரியாமல் என்னை அறியாமல் 
உன்னில் காதல் கொண்டேனே ஏ...ஏ... ஓ ஹோ

சிலையை மீட்டும் உளியைப் போலே என்னைத் தொட்டாயே 
கலயம் செய்யும் விரலால் என்னை ஏதோ செய்தாயே 

உடையை களையாமல் வழியை உணராமல் 
சுகமாகக் கொன்றாயே 

உன்னைக் கண்ட மறு நொடியே 
இருதயம் வலப் புறம் மாறிடுதே 

உன் கை தீண்டும் ஒரு நொடியில் 
நரம்புகள் எனக்குள்ளே வெடிக்கின்றதே

மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சையானேனே 

தனியே நாமும் காணும் நேரம் பூமி நிற்கட்டும்
பிரியா விடையை சொன்ன பின்னே மீண்டும் சுற்றட்டும்
சிறகை விரிக்காமல் உயரே பறக்காமல் 
விழி விண்ணைத் தாண்டட்டும் 

உந்தன் முன்னே தூங்கும் தோட்டம் தோற்றுப் போகட்டும் 
நீயும் சூட பூக்கள் எல்லாம் கெஞ்சிக் கேட்கட்டும் 
கடலும் நீயாக புயலும் நானாக
உன்னில் மையம் கொள்ளட்டும் 

காதல் என்ற வார்த்தையிலே 
ஆயிரம் கவிதைகள் தெரிகிறதே 

இமைகள் தாக்கி இதயங்களே
பொடிப் பொடிப் பொடியாய் உதிர்கிறதே 

மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு 
அது தாக்கி தாக்கி மூர்ச்சையானேனே 
மருகி மருகி தினம் உருகி உருகி 
உன்னைத் தாங்கித் தாங்கி மோட்சம் போனேனே 
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே 
என்ன ஆச்சு ஏதும் எனக்குத் தெரியாதே


பாடியவர்கள்:விஜய் பிரகாஷ், மதுமிதா
படம்: யுவன் யுவதி
இசை:விஜய் ஆண்டனி
பாடல்:கலைக்குமார்

20110828

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ ...




காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ 
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ 
பூமி முடியும் அந்த எல்லை 
வரைப் போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் 
வரைப் போவோமா
இன்றென்ன இத்தனை இன்பம்
இதயக் கூட்டில் நீந்திடுதே 
நடை பாதை பூக்கள் எல்லாம் 
கைகள் நீட்டிடுதே 
நீங்காத புன்னகை ஒன்று 
உதட்டின் மீது பூத்திடுதே 
வாழ்க்கையை பிடிக்கிறதே 

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ 
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ 
பூமி முடியும் அந்த எல்லை 
வரைப் போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் 
வரைப் போவோமா

ஓ... ஒரு நாள் இந்த ஒரு நாள் 
உயிரோடு இருந்தாலும் வாழும் 
பயணம் இந்த பயணம் 
இது தொடர்ந்திட வேண்டும் 
அருகில் உனதருகில் நான் வாழும் 
நிகழ் காலம் போதும் 
நிமிடம் இந்த நிமிடம் 
இது உறைந்திட வேண்டும் 
மௌனத்தில் சில நேரம் 
மயக்கத்தில் சில நேரம் 
தயக்கத்தில் சில நேரம் 
இது என்னவோ புது உறவின்கே 
கண்ணருகில் சில தூரம் 
கை அருகில் சில தூரம் 
வழித் துணையைக் கேட்கிறதே 
வா வா வா

ஓ நம் நெஞ்சில் ஓரம் ஏன் 
இங்கு இதனை ஈரமோ
நம் கண்களில் ஓரம்தான் 
புதுக் கனவுகள் நூறும் 
இது என்ன இது என்ன
இந்த நாள் தான் திருநாளா
இதற்காக இதற்காக 
காத்திருந்தோம் வெகு நாளா

இன்றென்ன இத்தனை இன்பம்
இதயக் கூட்டில் நீந்திடுதே 
நடை பாதை பூக்கள் எல்லாம் 
கைகள் நீட்டிடுதே 
நீங்காத புன்னகை ஒன்று 
உதட்டின் மேலே பூத்திடுதே 
வாழ்க்கையை பிடிக்கிறதே

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ 
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ 
பூமி முடியும் அந்த எல்லை 
வரைப் போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் 
வரைப் போவோமா

பாடியவர்கள்: கார்த்திக், ஸ்ரீசரண்
படம்: வெப்பம்
இசை: ஜேஸ்வா ஸ்ரீதர்
பாடல்:  நா முத்துக்குமார்

20110827

கண்ணாடி நீ கண்ஜாடை நான்...




கண்ணாடி நீ கண்ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்

கண்ணோடு வா நீ ஹே ஹே
மோக தளம் போடு நீ ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டுச் செல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்

என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்
எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்
உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள

கண்ணாடி நீ கண்ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்

தூரம் இல்லாமல் உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
வீரம் கொண்டாடும் கலைஞனாக
ஈரம் மண்மேலே விழுந்து நீராக
தீராத போர் ஒன்று நீ தந்து என்னை வெல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்

பாடியவர்கள்: எஸ்.பி.பி.சரண், பவதாரிணி
படம்: மங்காத்தா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: நிரஞ்சன் பாரதி

20110826

என் நண்பனே என்னை ஏய்த்தாய்...




என் நண்பனே என்னை ஏய்த்தாய்...ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய் 
உன் போலவே நல்ல நடிகன்... ஓ
ஊர் எங்கிலும் இல்லை ஒருவன் 
நல்லவர்கள் யாரோ 
தீயவர்கள் யாரோ 
கண்டு கொண்டு கன்னி யாரும்   
காதல் செய்வதில்லையே 
கங்கை நதியல்ல கானல் நதி என்று 
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ 

காதல் என்பது கனவு மாளிகை 
புரிந்து கொள்ளடி என் தோழியே 
உண்மை காதலை நான் தேடி பார்கிறேன் 
காணவில்லையே என் தோழியே

வலக்கையை பிடித்து 
வளைக்கையில் விழுந்தேன் 
வலக்கரம் பிடித்து
வலம் வர நினைத்தேன் 
உறவெனும் கவிதை
உயிரினில் வரைந்தேன் 
எழுதிய கவிதை
என் முதல் வரிமுதல் 
முழுவதும் பிழை 
விழிகளின் வழி
விழுந்தது மழை 
எல்லாம் உன்னால் தான் 
இதுவா உந்தன் நியாங்கள்
எனக்கேன் இந்த காயங்கள் 
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் 
முருகன் முகம் ஆறுதான்
மனிதன் முகம் நூறுதான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ 

என் நண்பனே என்னை ஏய்த்தாய்

காதல் வெல்லுமா காதல் தோற்குமா
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே
காதல் ஓவியம் கிழிந்து போனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும் 

அடிக்கடி எனை நீ 
அனைத்ததை அறிவேன் 
அன்பெனும் விளக்கை
அனைத்ததை அறியேன் 
புயல் வந்து சாய்த்த 
மரம் ஒரு விறகு 
உனக்கென்ன தெரியும் 
என் இதயத்தில் வந்து
விழுந்தது இடி 
இள மனம் எங்கும் 
இருந்தது வலி
யம்மா யம்மா
உலகில் உள்ள பெண்களே 
உரைப்பேன் ஒரு பொன்மொழி 
காதல் ஒரு கனவு மாளிகை
எதுவும் அங்கு மாயம்தான்
எல்லாம் வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே 

காதல் என்பது கனவு மாளிகை 
புரிந்து கொள்ளடி என் தோழியே 
உண்மை காதலை நான் தேடி பார்கிறேன் 
காணவில்லையே என் தோழியே

பாடியவர்கள்: மதுஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா
படம்: மங்காத்தா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: வாலி

20110825

விழிகளில் ஒரு வானவில் ...




விழிகளில் ஒரு வானவில் 
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

உன்னிடம் பார்கிறேன் நான் பார்கிறேன்
என் தாய்முகம் அன்பே
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே
முதன் முதலாய் மயங்குகிறேன்
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்னே என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா

விழிகளில் ஒரு வானவில் 
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே
வீதி என்னாகுமோ

யார் இவன் யார் இவன்
ஓர் மாயவன் மெய்யானவன் அன்பில்
யார் இவன் யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மணம்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நான் உனக்காக பேசினேன்
யார் என்னக்காக பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்த கனவெங்கே
காற்றில் கை வீசினேன்
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன்புதானடா இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

பாடியவர்: சைந்தவி 
படம்: தெய்வத் திருமகன் 
இசை: ஜி வி பிரகாஷ் குமார்
பாடல்: நா.முத்துக்குமார்

20110824

ஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு...




ஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
தாயக தந்தை மாறும் புது காவியம்
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

ஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு


முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு


கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதை இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்க்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆர் ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

பாடியவர்: ஹரிசரண்
படம்: தெய்வத் திருமகன் 
இசை: ஜி வி பிரகாஷ் குமார் 
பாடல்: நா.முத்துக்குமார்

20110823

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே...




ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்
என்னோடு புது மாற்றம் தந்தாள்
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ
கண் தூங்கும் போதும் காவல் தந்தாள்
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்

ஓ ஹோ ஓ ....ஓ ஹோ ஓ ....ஓ ஹோ ஓ ....

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்

என் வானில் மேகங்கள் சொல்லாமல் தூறுதே
என் காதல் வானிலை சந்தோஷம் தூவுதே
நீ தந்த பார்வை நனைந்தாளே பாவை
அன்பே அன்பே எந்தன் நெஞ்சில்
ஒளி வீசும் காலை
இருள் பூசும் மாலை
உந்தன் முகம் எந்தன் கண்ணில்

மின்சாரம் இல்லா நேரத்தில்
மின்னலாய் வந்து ஒளி தருவாள்
அந்த வெளிச்ச மழையில்
நான் நனைந்திடுவேன்
விரல் தொட்டு விடும் தூரத்தில்
மனம் சுட்டெரிக்கும் பாரத்தில்
புரியாத போதை
இது புரிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

அவள் மாலையில் மலர்ந்திடும் மலர் அல்லவா
வாசனை என் சொந்தம்
அவள் அனைவரும் ரசித்திடும் நதி அல்லவா
அலை மட்டும் என் சொந்தம்

கண்ணாடி அவள் பார்த்ததில்லை
ஏன் என்று நான் கேட்டதில்லை
அவள் அழகை அளக்கும் ஒரு கருவி அல்ல
அவள் கட்டளையை கேட்டு தான்
நான் கட்டுப்பட்டு வாழுவேன்
அறியாத பாதை இது அறிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

ஓ ஹோ ஓ.....ஓ ஹோ ஓ ....ஓ ஹோ ஓ ....

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்
என்னோடு புது மாற்றம் தந்தாள்
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ
கண் தூங்கும் போதும் காவல் தந்தாள்
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்

பாடியவர்:கிளிண்டன், ஸ்வேதா
படம்: வெப்பம்
இசை: ஜேஸ்வா ஸ்ரீதர்
பாடல்:நா முத்துக்குமார்.

20110822

உன்னை மறக்காமல் இருப்பதால்...




உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்

உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

நீ கண்ணில் விழுந்த நாளில்
என் அமைதி கலைந்ததடி
மனம் கல்லை எறிந்த குளமாய்
அதில் அலை வந்து எழுந்ததடி
என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே
இது காதல் கொடுத்த வலி
இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே
நீ என்னைப் பிரிந்த நொடி

ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்

உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

இந்த உடலைப் பிரிந்து வெளியே
எந்தன் உயிர் தான் அலையுதடி
நான் மட்டும் இங்கே தனியே
என் இதயம் வலிக்குதடி
உடலுக்கு ஒரு முறை மரணம் வரும்
என் மனம் தினம் சாகுதடி
நரகத்தை போல் என் வாழ்க்கை
உன் ஞாபகம் கொல்லுதடி

ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்
ஓ மை ஏஞ்சல்... ஓ மை ஏஞ்சல்


பாடியவர்: விஜய் ஆண்டனி
படம்: யுவன் யுவதி
இசை: விஜய் ஆண்டனி
பாடல்:அண்ணாமலை