20091231

புலி உறுமுது புலி உறுமுது

HAPPY NEW YEAR
2010









புலி உறுமுது புலி உறுமுது 
இடி இடிக்குது இடி இடிக்குது 
கொடி பறக்குது கொடி பறக்குது 
வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது 

துடி துடிக்குது துடி துடிக்குது 
நில கொலயுது நில கொலயுது 
வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்டா கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...

ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வரான் பாரு வேட்டைக்காரன்..

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து


யார் இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு ஆயுதம் போல் கூறு இவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகிக்கு அழகுடா
அடங்க மறுத்த உன்னை அழிச்சுடுவான்
இவன் அமிலத்தை மோந்து தினம் குடிச்சுடுவான்
இவனோட நியாயம் தனி நியாயம்
அட இவனால அடங்கும் அநியாயம்
போடு அடிய போடு போடு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா


புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து



அச தோமா சக் கமைய தம சோம ஜோதி கமைய வித் ஜோம அமிர்தம் கமய ஓம் சாந்தி சாந்தினி

யார் இவன் யார் இவன் யார் இவன் ஒத்தையா நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை தான் எவனடா
இவனுக்கு இல்லடா கடி வாளம்
இவன் வரலாற்ற மாத்திடும் வரும் காலம்
திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்
போடு அடிய போடு போடு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்டா கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...

ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வரான் பாரு வேட்டைக்காரன்


புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து




பாடியவர்கள்:  அனந்து, மகேஷ்வினாயக்ராம்   
படம்:  வேட்டைக்காரன்
இசை:  விஜய் ஆண்டனி

20091230

நான் அடிச்சா தாங்க மாட்ட...





நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
(நான் அடிச்சா..)

நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள்பறை நீ அடி
(நான் அடிச்சா..)

ஏ வாழு வாழு வாழ விடு
வாழும் போது வானை தொடு
வம்பு பண்ணா வாளை எடு
வணங்கி நின்னா தோளைக் கொடு
(ஏ வாழு..)
(நான் அடிச்சா..)

ஏ மை ராசா
வா நீ க்லோஸா
ஆடு என் கூட வில்லேஜ் சல்ஸா
சல்ஸா சல்ஸா ச ச ச ச
ஜல்ஸா ஜல்ஸா ஜ ஜ ஜ ஜ ஜ

உணவு உடை இருப்பிடம் உழவனுக்கு கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கணும்
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறணும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தணும்

வாய் மூடி வாழாதே வீண் பேச்சு பேசாதே
காலம் கடந்து போச்சுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வேணுமுன்னா கண்ணை மூடி தூங்காதே
குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து
(நான் அடிச்சா..)

வரட்டி தட்டும் செவுத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கருத்து போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சை மீறாதே தீயோர் சொல் கேட்காதே
ஏதோ நானும் சொல்லிப்புட்டேன் ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையின்னா உன்னை நீயே மாத்திக்கோ
குத்துங்கடா குத்து ஏழூரு கேட்க குத்து
(நான் அடிச்சா..)




பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன் & குழுவினர்
படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் ஆண்டனி

20091229

உன்னை காதலி என்று சொல்லவா...




உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே என் காதல் நெடுஞ்சாலை
உன் மூச்சுக்காற்றெல்லாம் அதில் தென்றல் தொழிசாலை
இதுவரைச் சொன்னது கவிதையல்ல
இதற்கு மேல் சொல்ல நான் கவிஞன் அல்ல
(உன்னை காதலி..)



அன்பே உந்தன் பார்வை ஏதோ சொல்ல
கட்டி அணைத்தால் என்ன
எந்தன் பிரிவுக்கு பதில் சொல்ல
பெண்ணே நீயும் ஒரு கனவல்ல
ஒரு போராட்டம் தான் எந்தன் நெஞ்சுக்குள்ளே
நானும் சொல்ல
அண்ணாந்து பார்க்கும் போது
ஆகாயம் நீல நிறம்
மண் மீது பார்க்கும் போது
என் வாசல் கோலம் நீதான்
விரல் நகத்தை கண்டால் கூட
முன் நின்று ரசிப்பேனே
உந்தன் நெஞ்சை கண்டால்
சொர்க்கம் என்றே போவேன் நானே
(உன்னை..)

சில்லென்று நீர்ப்போல நானிருந்தேன்
என்னை நீ தொட்டதால்
எந்தன் வெள்ளை தேகம் வெண்ணீராச்சு
கண்ணாடி சிற்பம் போல உன்னைக் கண்டேனே
இவள் முன்னாடி நான் நின்று
என்னை நானே காதல் கொண்டேன்
தீமூட்டும் ஆசையாலே தினந்தோறும் நின்றுபோனேன்
தாய் வீட்டை நான் மறந்து உன்னோடு ஓடிவந்தேன்
ஆகாயம் பூமியெல்லாம் ஆண்டாண்டு காலமடி
ஆனாலும் என் காதல் அதைத்தாண்டி வாழுமடி
(உன்னை..)


பாடியவர்கள்: நரேஷ் ஐயர், சாதனா சர்கம்
படம்: கந்தக் கோட்டை
இசை: தீனா


அவள் புருவத்தை சாய்த்து...



இரு சக்கர வாகனமாக அவளது விழிகள்
விபத்தாகி விழுந்தது ஏனோ எனது இரு விழிகள்

அவள் புருவத்தை சாய்த்து பார்க்கவில்லை
புன்னகையில் ஒரு மாற்றமில்லை
கால் விரலால் நிலம் தோண்டவில்லை
கடந்தப்பின் திரும்பி சிரிக்கவுமில்லை
எப்படி என்னுள் காதல் வந்தது
ஓஹோ எப்படி என்னுள் காதல் வந்தது



ஓஹோ எச்சில் உணவுக்கொடுக்கவில்லை
எனக்காய் இரவில் விழிக்கவில்லை
பார்த்ததும் ஆடை திருத்தவில்லை
பாஷையில் முனைகள் சேர்க்கவுமில்லை
எப்படி என்னுள் காதல் வந்தது
ஓஹோ எப்படி என்னுள் காதல் வந்தது



என்னைப் பார்த்ததும் குழந்தையை தூக்கி முத்தம் கொடுக்கவில்லை இல்லை
என் பெயர் கேட்டதும் கன்னங்கள் இரண்டும் சிவந்து போகவில்லை இல்லை
என் தெருவில் அவள் அடிக்கடி தினுசாய் திரிந்துப் பார்ப்பதில்லை
ஓ என்னிடம் எதுவும் பிடித்ததுபோல புகழ்ந்து உரைத்ததில்லை
ஆனாலும் ஆனாலும் ஆனாலும்
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை என்னிடமே தான் கேட்கத் தோணுது



என்னிடம் உள்ள கெட்ட பழக்கத்தை தட்டி கேட்டதில்லை இல்லை
சாப்பிடும்போது அவள் நினைத்து நான் தும்மல் போட்டதிலை
அவள் கனவில் நானும் வந்துப் போனதாய் எந்தச் சுவடுமில்லை
ஒரு நாள் கூட நள்ளிரவில் குறுஞ்செய்தி வந்ததில்லை
ஆனாலும் ஆனாலும் ஆனாலும்
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை என்னிடமே தான் கேட்கத் தோணுது
(அவள்..)



பாடியவர்: நகுலன்
படம்: கந்தக்கோட்டை
இசை: தீனா

என் காதல் சரியோ தவறோ...




Feel my love

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love
என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love
என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோம் பிடித்தோம் அடித்தோம் அணைத்தோம்
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)


நான் தந்த பூவை எல்லாம் வீசும்போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும்போது Feel my love
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும்போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும்போது Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அதுகூட கோபமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)


கைவிசிறி போலே உன் கை தீண்டும்வரம் வேண்டாம்
மின்விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பன்னிரெண்டு மணி முள்ளை போல சேரும் ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீன்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உந்தன் அனுமதியே
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்...)



பாடியவர்: கேகே
படம்: குட்டி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்

20091217

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க...




அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்
அன்றில் அடைமழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதியலையானாய்
நான் நான் அதில் விழும் நிலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொடப் பிழைத்திடுவேனோ
மழையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம்
மெளனத்திலே கலக்கும்


(அன்பே என் அன்பே)


நீ நீ ஒரு புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம்
எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

(அன்பே என் அன்பே)


பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
படம்: தாம்தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: நா.முத்துக்குமார்


ஓ திவ்யா திவ்யா...




ஓ திவ்யா திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா
உன் பாத கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே ஆசை
திரு முகம் காட்டி உயிர் காப்பாயா

ஓ திவ்யா திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா


எனக்காக என்னை பற்றி யோசிக்க தான் நீ வந்தாய்
அழகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தாய்
வெறும் கல்லாய் வாழும் என்னை தொட்டு சிற்பம் செய்கிறாய்
சிறு நூலை ஆகும் என்னை அள்ளி ஆடை நெய்கிறாய்
இயல்பாக பேசும் போது எனக்கே தெரியாமல் தான்
உன் பேரை சொல்லி போகிறேன்
இனிப்பான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் எரும்பை போல
உன் காதல் ஏந்தி செல்கிறேன்

ஓ திவ்யா திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா



முதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை
அதற்குள்ளே மீண்டும் பார்த்தாய் ஐயோ முடியவில்லை
உன் நாசி தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே
உன் நாபி கமலம் அங்கே கண்கள் சிக்கி கொண்டதே
மிருதுவான மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கண்ணே
உனக்காக தானே வாழ்கிறேன்
நூற்றாண்டு கடிதம் போலே உதிர்கின்ற எந்தன் மனசை
உனக்காக திறந்தும் வைக்கிறேன்

ஓ திவ்யா திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா


பாடியவர்: ஷான்,
இசை: D. இமான்,
படம்: மாசிலாமணி,

20091216

என் காதல் சொல்ல நேரம் இல்லை...




என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
(என் காதல் ..)

காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
(என் காதல் ..)



பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தான்வி
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

அடடா மழைடா அட மழைடா...




தந்தானே தந்தானே

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
(அடடா மழைடா..)

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடிப் பாரு
மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னைப் போல வேற யாரும் இல்ல
என்னை விட்டா வேற யாரு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்டை கொடுத்தென்னை அனுப்பிவைச்சான்
இந்த கண்ணு போதலையே எதுக்கு இவள படைச்சுவைச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒன்னு என்னை கொன்னு புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே ..
(அடடா மழைடா..)
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சூடாச்சு
இடியை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேண்டாம்
மழையை பூட்டி யாரும் என் மனசை அடைக்க வேண்டாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு




பாடியவர்கள்: ராஹுல் நம்பியார், சைந்தவி
படம்: பையா

இசை: யுவன் ஷங்கர் ராஜா

முதல் முறை உன்னைப் பார்த்த போதே...






முதல் முறை உன்னைப் பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே
கனவினில் உன்னைப் பார்க்கும் போதும்
அருகினில் என்னைக் காண வேண்டும்
உன் அருகே நான் இருந்தால் சிலிர்க்கிறதே
நீ விளையாட்டு பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
என்னை தாயைப் போலத் தாங்க வேண்டும் மடியினிலே
(முதல் முறை..)

நீ அருகில் தோன்றும் நேரமே
வான் நிலையும் மாறிப்போகுதே
நீயும் நினைத்தால் வானவில் வந்துவிடுமே
உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் பேசிட வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே
உன்னுடன் இருப்பதால் இருமுறை இறக்கிறேன்
உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்
நான் உன் மூச்சில் வாழும் வரமது என்னாளும் போதும்
நீ சூடும் போதும் வாடும் போது வலித்திடுமே
(முதல் முறை..)

நீ நடந்துபோகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குவேன்
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமும்
தோள் இரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நெஞ்சில் தினமுமே
சூரியன் உதிப்பதே உன்னுடல் காணவே
பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே
இனி மழைமேகம் யாவும்
இறங்கியே உனைத்தேட ஏங்கும்
இனி கோயில் தேடிப் போகமாட்டேன்
தெய்வமும் நீ
(முதல் முறை..)



பாடியவர்கள்: ஹரிசரண், ஹரிணி, திப்பு
படம்: அதே நேரம் அதே இடம்
இசை: ப்ரேம்ஜி அமரன்

வாராயோ வாராயோ காதல்கொள்ள...




வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

ஓலைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனோடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா

(வாராயோ வாராயோ காதல் கொள்ள)

நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே

நீ நீ நீ மை ஃபேர் லேடி
வாவா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ

(வாராயோ வாராயோ மோனாலிஸா)



பாடியவர்கள்: சின்மயி,மேகா, உன்னிக்கிருஷ்ணன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம்: ஆதவன்
பாடல் இயற்றியவர் : கபிலன்

பொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்






பாடலாசிரியர்: யுகபாரதி
இசை: சபேஷ் - முரளி


கனவு சில சமயம்
கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு
அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டு
விடியும் பொழுதுவரை விழித்திரு
இது யூகிக்க முடியாகக் கணிதமே
ஒரு போருக்குப் போகும் பயணமே
இன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகுடா
துன்பம் நீங்கிப் போகும் தோல்விகூட அழகுடா
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே


தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறு புறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயிலிருக்க அலையில் புறல்கிறது ஆண்கலை
இந்த வாழ்வில் ஏதும் நேரலாம்
அந்த ஈசன் தீர்ப்பைக் கூறலாம்
இன்றுப்போல நாளை இல்லை என்றும் ஆகலாம்
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே




பாடியவர்: பிரசன்னா





அழகு முகம் மலர்ந்து
தாயின் மடி கடந்து
உலகம் ரசித்திருக்கும் குழந்தையே
எதிலும் மனம் உடைந்து
வெறுமை என உணர்ந்து
தனிமை ருசித்திருக்கும் முதுமையே
சிலர் வாழ்க்கை இன்று தொடங்குமே
வரும் நாளை எண்ணி இயங்குமே
நாம் வாழும் வாழ்க்கை நீண்ட தூர பயணமே
அதை வாழ்ந்து பார்க்க தூண்டும் நம்மை உலகமே
தினம் ஒவ்வொரு நொடியிலும் பயணமே
வரும் ஒவ்வொரு விடியலும் பயணமே

புதிய தோற்றங்களும் புதிய மாற்றங்களும்
கனவை தருகிறது வாழ்க்கையில்
புதிய கேள்விகளும் புதிய தேடல்களும்
முழுமை அடைகிறது பூமியில்
இங்கு நீயும் நானும் பயணியே
வரும் வாழ்வும் தாழ்வும் பயணமே
இது காலம் தோறும் மாறிடாமல் தொடருமே
இதை காதலோடு ஏற்க வேண்டும் எவருமே




பாடியவர்: பிரசன்னா









சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி


உறவைத் தொடர்ந்து வரும் உயிர்கள் பழகவரும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை ரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்கக் கேட்கப் புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
(சிறு புன்னகை...)


வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை 
புதிய உறவுகளில் நிறைக்கிறேன்
அறிவு வெளியுலகில் அடையும் 
அவஸ்தைகளைப் பொழியும்
நிலவொளியில் பொசுக்கினேன்
இன்பம் யாவும் காட்டும் மனத்திரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும் 
நீயும் நானும் ஒருவனே
நம்மைப்பேச்சில் யார்க்கும் தோழன் யாரு 
இறைவனே..
(சிறு புன்னகை..)


பாடியவர்: பிரசன்னா







உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்
மதியவெயில் அடித்தும் மனதில் மழைப்பொழிந்த
இனிய மணித்துளியில் குளிக்கிறேன்
கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் அனுபவம்


இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா


எனது மனக்குகையில் புதிய ஒளிபரவ
புவியில் மறுப்படியும் பிறக்கிறேன்




பாடியவர்கள்: பிரசன்னா, மஹதி









மூன்று நாள் ஆகுமே பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா என் மனம்
என் நினைவோடு நீ துணை இருப்பாயடி
உன் அருகாமையில் வலிதொடராதடி
குரல் கேட்கும் வரை புவி சுழலாதடி


காலை நீ மாலை நீ காண்கிற காட்சி நீ
வேலை நீ வேள்வி நீ வீட்டிலே யாவும் நீ
நீ பேசாமலே மொழிப் பகையானதே
குறையில்லாமலே மனம் இசைப்பாடுதேன்
ஒரு யுகமாயினும் இதை இரசிப்பேனடி



பாடியவர்: கார்த்திக்









அஞ்சல் பெட்டியை கண்டதுமே கண்கள் சிரிப்பதேன்
என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி றெக்கை விரிப்பதேன்
துள்ளித்திரிந்த எந்தன் நாட்கள் தயங்கி நடப்பதேன்
என் தோளுக்குமேலே தூரிகைத்தீண்டும் உணர்வு முளைப்பதேன்
இராட்டினங்கள் மூளைக்குள்ளே சுற்றி சுழல்வதேன்
என் நாடித்துடிப்பு நூறு மடங்காய் நொடியும் உயர்வதேன்
பம்பரங்கள் காலில் சுழலும் பரப்பரப்பு ஏன்
என் அங்கம் எங்கும் புதுப்புது மின்னல் உருவெடுப்பதேன்
(அஞ்சல்..)


கொஞ்ச நாளும் மனமே உனக்கு ஏன் நடந்தது
நான் ஓய்வில்லாமல் தத்தித்தாவ உலகம் மறந்தது
உச்சந்தலையை வானவில்லும் துவட்டுகின்றது
என் உள்ளங்கையில் ரேகைப் பூவாய் மலருகின்றது
உள்ளத்துணையை வாசக்காற்றில் சலவை செய்தது
நான் ஒவ்வொரு நொடியும் பிறப்பது போல கவிதை சொன்னது
கனவில் மிதந்து நடனம் ஆட கால் நினைத்தது
நான் கரையக் கரைய மேலேப் போக வால் முளைத்தது
என்னை நானே இரசித்துக்கொள்ளும் நிலைமையானது
இது நித்தம் நிகழும் ஆனால் கூட புதுமையானது




பாடியவர்: கார்த்திக்








மொழி இல்லாமலே இதை சொல்வான் இனி
உயிர் இல்லாமலே இதைக் காண்பான் இனி
வாசமே போனப்பின் பூக்களேப் பூப்பதேன்
சுவாசமே வந்தபின் மூச்சிலே காற்று ஏன்
ஒரு கண்ணாடிப் போல் நான் உடைந்தால் என்ன


வழி இல்லாமலே எங்கு செல்வான் இனி
உயிர் இல்லாமலே என்ன செய்வான் இனி
ஓடையே காய்ந்தப்பின் மீன்களே
வானமே வீழ்ந்தப்பின் உடல் ஏன் வாழ்வதேன்
அட பூலோகமே இனி அழிந்தால் என்ன


பாடியவர்: மது பாலகிருஷ்ணன்







ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ
ஓஹோஹோ
நானா நானனா நானனா


ஓஹோஹோ தீர்ந்ததே பெருங்கடல் தாகமே
ஓஹோஹோ சேர்ந்ததே மழைத்துளி மேகமே
அட மின்னல் இங்குத் தன்னைவிட்டுப் போகுமே
இந்த மண்ணில் இனி ஒளிப்பஞ்சம் தீருமே
ஓஹோஹோ மின்மினி பூச்சிகள் பூக்களாய்
ஓஹோஹோ வெண்ணிலா பார்வைகள் கூச்சமா


நான் சந்தோஷங்கள் பெற்றெடுத்தப் பிள்ளையே
இந்த நட்புக்குள்ளேத் தப்பு ஒன்றும் இல்லையே
ஓஹோஹோ என்னிடம் சிறகில்லை பறக்கிறேன்
ஓஹோஹோ நெல்மணி போல நான் உழைக்கிறேன்


பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்






20091215

துளி துளி துளி மழையாய் வந்தாளே...





துளி துளி துளி மழையாய் வந்தாளே...
 சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...

சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாய்வேன்..
பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...



படம்: பையா
இசை: யுவன்ஷங்கர் ராஜா

இப்பவே இப்பவே ...





பெ: ம்ஹீம் ஹீம் ஹீம் ஹீம் ஹீம்
ஆ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
பெ: ஹீம் ஹீம் ஹீம்
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெ: ஹீம் ஹீம் ஹீம்

ஆ: கண்ணை மூடி உன்னைக் கண்டால் அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே




ஆ: வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது

பெ: முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்

ஆ: சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌

பெ: மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌

ஆ: உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்

பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே


ஆ: எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்

பெ: நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்

ஆ: உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை
பெ: உன்னை நீங்கிப் போகும் நேரம் சோலை கூடத் தார்ப்பாலை
ஆ: மண்ணுக்குள்ளே வேரைப் போலே நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

பெ: கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
ஆ: கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே

பெ: ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே




பாடியவர்கள்: மதுபாலகிருஷ்ணன், ஹரிணி

படம்: ராமன் தேடிய சீதை
இசை: வித்யாசாகர்



முன் தினம்...



 Hai Malini .. I am Krishnan...

        நான் இதை சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
        இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
         இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
      
And I am in love with you...



ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
        எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
        வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
        இப்போதே என்னோடு வந்தாலென்ன‌
        ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன
      இப்போதே என்னோடு வந்தாலென்ன‌
        ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன

       (முன் தினம் பார்த்தேனே..)


ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
        நிகர் செய்ய பொன்னை வைத்தால்
    துலாபாரம் தோற்காதோ பேரழகே

பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
       முதல் காதல் சிந்தும் கண்ணை
      அணைக்காமல் போவேனோ ஆருயிரே

ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
       புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
       வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக

ஆ: oh my love
பெ: உன்னை நான் பாராமல்
ஆ: yes my love
பெ:  எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே


பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
         அலை வந்து தீண்டும் தூரம்
        மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே

ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
       விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
       இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
         உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
         உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..



பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,  பிரசாந்தினி
படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: தாமரை

மின்னல்கள் கூத்தாடும்...




ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடி

பெ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

இரு: எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடிக்குதடி

ஆ: முதன்முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் பறித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

பெ: காதலே ஒருவகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
ஆ: எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

பெ: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே
ஊ ஆ ஆ ஊ ஆ ஊ ஆ ஊ ஊ ஆ ரா ரே ரா ரே

ஆ: ஓஓஓ காதலும் ஒருவகை போதைதானே உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல
ஏன் இந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால் புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல

பெ: உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடா

ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

இரு: உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்குதடா

ஆ: ஆ ஆ ஆ ஆ .. ஆ ஆ ஆ ஆ..



பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ
படம்: பொல்லாதவன்
இசை: ஜி.வி. பிரகாஷ்


கண்கள் இரண்டால்...






ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
       என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
       சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
       (கண்கள் இரண்டால் உன்)

பெ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
        பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி
        கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
        ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
        ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
        இதை இருளிலும் படித்திட முடிகிறதே





ஆ: இரவும் அல்லாத பகலும் அல்லாத‌
        பொழுதுகள் உன்னோடு கழியுமா
        தொடவும் கூடாத படவும் கூடாத‌
        இடைவெளி அப்போது குறையுமா

பெ: மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே
         மறுபுறம் நாணமும் தடுக்குதே
         இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
       என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
       சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்


பெ: கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌
         மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
         உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌
         கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

ஆ:  உனையன்றி வேறொரு நினைவில்லை
         இனி இந்த ஊனுயிர் எனதில்லை
         தடையில்லை சாவிலுமே உன்னோடு வர‌

பெ: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
          ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
          ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
         இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
         பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே
         நகர்வேனே மாற்றி

பெ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
         என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென‌

ஆ:  சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்





பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
படம்: சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்