20101231

தோகை இளமயில் ...




தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் 
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம்
படம் : பயணங்கள் முடிவதில்லை
இசை : இளையராஜா
பாடல்: வைரமுத்து.

நீதானே எந்தன் பொன்வசந்தம்...









நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா...
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என் நாளும்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்



ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் என் நாளும்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்


பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து

20101230

தெய்வீக ராகம் ...



தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல் 
கேட்டாலும் போதும் 
இள நெஞ்சங்கள் வாடும்
ம்ம்ம்..... ஆஆஆ....
தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல்

செந்தாழம் பூவைக்கொண்டு 
சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து 
தேலாடும் கரையில் நின்றேன்
பாரட்ட வா.... சீராட்ட வா...
நீ நீந்த வா... என்னோடு... 
மோகம் தீருமே....
ம்ம்ம்... ஆஆஆ.... 

தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல் 
கேட்டாலும் போதும் 
இள நெஞ்சங்கள் வாடும்

தழுவாத தேகம் ஒன்று 
தனியாத மோகம் கொண்டு
தாலாட்ட தென்றல் உண்டு 
தாழாத ஆசை உண்டு
பூமஞ்சமும் தேன் கிண்ணமும்
நீ தேடி வா... ஒரே ராகம்...
பாடி ஆடுவோம் வா

ம்ம்ம்... ஆஆஆ.... 

தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல் 
கேட்டாலும் போதும் 
இள நெஞ்சங்கள் வாடும்


பாடியவர்: ஜென்சி
படம் : உல்லாச பறவைகள்
இசை: இளையராஜா
பாடல் : தசரதன்

20101229

விழியிலே மலர்ந்தது ...



விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

உன் நினைவே போதுமடி 
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும் 
பொன் விளக்கே தீபமே 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் 
ஓரழகைக் கண்டதில்லையே 

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் 
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி 
கண்களுக்கு விளைந்த மாங்கனி 
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

கையளவு பழுத்த மாதுளை பாலில் 
நெய்யளவு பரந்த புன்னகை 
கையளவு பழுத்த மாதுளை பாலில் 
நெய்யளவு பரந்த புன்னகை 
முன்னழகில் காமினி 
பின்னழகில் மோகினி 
மோக மழை தூவும் மேகமே 
யோகம் வரப் பாடும் ராகமே 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 
எங்கெங்கும் உன்னழகே 


பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம். 
படம்: புவனா ஒரு கேள்விக்குறி
இசை : இளையராஜா 
பாடல்: பஞ்சு அருணாசலம் 

20101217

விண்ணைக் காப்பான் ஒருவன்...



விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பவனே நல்லச் சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி-அட
ஆட்டமுன்னா என்னவென்னு ஆடிக்காமி
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

ஏறு முன்னேறு ஏறு 
பேரு வரும் பேரு பேரு
ஊரு அட யாதும் இங்க நம்ம ஊரு
ஓடு தெம்போடு போடு 
கூடு அன்போடு கூடு
வாழ்வில் அட வந்து போகும் பள்ளம்மேடு

எடுடா மேளத்த தாளத்த வேகத்த இனிமேதான் வித்த
மொத்தக் கூட்டத்த கூட்டித்தான் கொண்டாடு..

நம்ம சொந்தத்த பந்தத்த நெஞ்சத்த திருநாளில் கண்டு
ஒன்னாஉறவாடு அன்போட விளையாடு

ஆலாலகண்டனே ஆட்டத்துக்கு மன்னனே
ஆனந்தத் தாண்டவம் ஆடுவோமே
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

யாரு இள நெஞ்சில் யாரு 
கூறு அவன் காதில் கூறு
ராதை மனம் சொன்னதெல்லாம் கண்ணன் பேரு

ஊரு திருநாளில் ஊரு 
ஓடும் திருவாரூர் தேரு
ஆட்ட பலி கேட்டதில்ல ஐயனாரு

அன்பின் வழியொன்று மொழியொன்று 
என்றானால் உலகெல்லாம் ஒன்று
வெற்றிக் கொடிகட்டு பறக்கட்டும் முன்னாலே
அச்சம் விலகட்டும் விலகட்டும் மறையட்டும் 
அதைத் தூக்கிப் போடு
வீரம் விளையட்டும் விளையட்டும் மண்மேலே

நான் பாட்டுப் பாடுனா நாடாடும் ஆடும்ன்னா
நல்லசேதி யார்சொன்னாலும் கேட்டுப் போன்னா
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்
எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பவனே நல்லச் சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி-அட
ஆட்டமுன்னா என்னவென்னு ஆடிக்காமி


பாடியவர்கள்: திப்பு, ஸ்வேதா
இசை: வித்யாசகர்
படம்: காவலன்
பாடல்: பா விஜய்

20101216

Step Step Step it up...



one two three...
Step Step Step it up
இளமை அழைக்குது Step it up
இதயம் பறக்குது Step it up
Step it up

Step Step Step it up
உன்னுள் மின்னல் light it up
உச்சம் வரைக்கும் keep it up
Step it up

உற்றுப் பார் உலகம் எல்லாம் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அருகில் இன்பத்தீயை மூட்டிடும்
உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

Step Step Step it up
இளமை அழைக்குது Step it up
இதயம் பறக்குது Step it up
Step it up


கால் சட்ட மேல் சட்ட 
லூசாகப் போட்டுட்ட
நட்பாக யாரோடும் 
சேர மறுத்திட்ட
இப்போது விண்முட்ட 
புதுசாக எழுந்திட்ட
தோனுது கைதட்ட 
அடடா உசந்திட்ட

ஆற்றில் ஆடும் மீனடி 
காட்டில் துள்ளும் மானடி
எங்கும் எதிலும் நானடி பாரடி

புது வேஷம் 
புது வேகம்
புதிதான ஆளுதான்

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

Step Step Step it up
இளமை அழைக்குது Step it up
இதயம் பறக்குது Step it up
Step it up

பாக்கத்தான் சிறுபுள்ள 
கலக்குற பயபுள்ள
இளம்பெண்கள் நினைப்புல 
நீதான் மாப்பிள்ள

ஏமாந்த ஆளில்ல 
நான் முன்னப் போலில்ல
பாரேண்டியென் ஆட்டம் 
யாரும் இணையில்ல

டுன் டுன் டுன் ஒலியுடன் 
அதிரும் கால்கள் உன்னுடன்
ஆடு கொஞ்சம் என்னுடன் என்னுடன்

கைகோர்த்து… 
மெய் சேர்த்து 
உயிர் பூத்து ஆடலாம்…

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ
one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ


பாடியவர்கள்: பென்னி, மேக்ஹா
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்
பாடல்: விவேகா

20101215

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது ...




ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது
     பேசக் கூடாதே

ஆ : யானைத் தந்தத்தின் சிலை நீயே 
    ஏறும் தங்கத்தின் விலை நீயே

பெ : காதல் வீசிய வலை நீயே
     என்னைக் கட்டி இழுத்தாயே

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

பெ : எதைத்த தருவது தானென்று 
     எதைப் பெறுவது தானென்று
     குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல 
     இதயம் குதித்தோட

ஆ : தலையசைக்குது உன் கண்கள்
    தவிதவிக்குது என்நெஞ்சம்
    ஒரு தீ போல ஒருத்தி வந்து 
    உயிரைப் பந்தாட

பெ : ஞாபகம் உன் ஞாபகம்
     அது முடியாத முதலாகும்

ஆ : பூமுகம் உன் பூமுகம்
    அது முடியாத முதல் பாகம்

பெ : பெண்கவிதை இவள்தானே 
     உன் இதழால் படிப்பாயோ
     கண்ணிமையால் எனை மூடி 
     காதல் திறப்பாயோ

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
     பூவே ஓடாதே

பெ : ஓய் ஓய் காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

ஆ : அலைவரிசையில் நீ சிரிக்க 
     தொலைத்தொடர்பினில் நான் இருக்க
     உதடும் உதடும் பேசும் போது 
     உலகை மறந்தேனே

பெ : உனதருகினில் நானிருக்க 
     உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க
     இரண்டாம் முறையாய் இதயம் துடிக்கப் 
     புதிதாய்ப் பிறந்தேனே



ஆ : மாலையில் பொன் மாலையில் 
    உன் மடி மீது விழுவேனே

பெ : மார்பினில் உன் மார்பினில் 
     நான் மருதாணி மழை தானே

ஆ : வெண்ணிலவோ நெடுந்தூரம் 
    பெண்ணிலவோ தொடுந்தூரம்
    உன்மழையில் நனைந்தாலே 
    காய்ச்சல் பறந்தோடும்

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

ஆ : யானைத் தந்தத்தின் சிலை நீயே
    ஏறும் தங்கத்தின் விலை நீயே

பெ : காதல் வீசிய வலை நீயே
     என்னைக் கட்டி இழுத்தாயே


பாடியவர்கள்: கே,கே, ரீட்டா
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்
பாடல்: கபிலன்

20101214

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்...


சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
அவள் நேரத்தில் வருவாளா காக்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலச் சிரிப்பாளா
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா
கொஞ்சிக் கொஞ்சிக் காதல் செய்து கொல்வாளா

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்


கட்டுத் தறியின்றி எனதுள்ளம் 
உனை எண்ணிக் கொண்டு
அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே
சொல்ல மொழி இன்றி தமிழ்சொற்கள் 
எனை விட்டு விட்டு
அந்தரத்தில் அம்மி கொத்துதே

காதல் தெருவிலே எனதாசை அலையுதே
நீங்கா நினைவிலே நிழல் கூட வெளுக்குதே
குரலாலே என்னில் குடியேறிக்கொண்ட
கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னைக் குத்துதே
சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கங்கை நதி வெள்ளம் 
சிறு சங்குக்குள்ளே சிக்கிக் கொண்டு
அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னம் சிறு பிள்ளை 
ஒரு சொப்பனத்தை வைத்துக் கொண்டு
கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே

நீ என் எதிரிலே 
வரவேண்டும் விரைவிலே
நேரில் வரும் வரை 
முகம் காட்டு கனவிலே

மெதுவாகச் செல்லும் கடிகாரமுள்ளும்
உனைக் காணச் சொல்லி 
ஹையையையோ நச்சரிக்குதே 
சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
அவள் நேரத்தில் வருவாளா காக்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலச் சிரிப்பாளா
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா
கொஞ்சிக் கொஞ்சிக் காதல் செய்து கொல்வாளா

பாடியவர்: கார்த்திக்
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்.
பாடல்: யுகபாரதி

20101213

யாரது யாரது யாரது யாரது ...



யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது 
சொல்லாமல் என் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் என்கண்ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது 

நெருங்காமல் நெருங்கி வந்தது 
விலகாமல் விலகி நிற்பது
விடையாகக் கேள்வி தந்தது 
தெளிவாகக் குழம்ப வைத்தது

யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது

என்னிலொரு சடுகுடுசடுகுடு 
காலை மாலை நடக்கிறதே

கண்ணில் தினம் கதகளி கதகளி 
தூங்கும் போது தொடர்கிறதே

என்னிலொரு சடுகுடுசடுகுடு 
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி 
தூங்கும் போது தொடர்கிறதே
இரவிலும் அவள் பகலிலும் அவள் 
மனதினைத் தருவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள் 
நிழலெனத் தொடர்வது புரிகிறதே

இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே

யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது

உச்சந்தலை நடுவினில் அவளொரு 
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சைராச்சியம்தொடங்குகிறாள்
அவளிவளென எவள் எவளென 
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட 
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்

இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள்

யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது
சொல்லாமல் என் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் என் கண்ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது 
விலகாமல் விலகி நிற்பது
விடையாகக் கேள்வி தந்தது 
தெளிவாகக் குழம்ப வைத்தது


பாடியவர்கள்: கார்த்திக், சுசித்ரா
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்
பாடல்: யுக பாரதி