20090922

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது...









ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரமிது
இதயமே ஓ…
இவளிடம் உருகுதே ஓ…
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே ஓ….
என்றாலும் ஓ…
கேட்காதே ஓ..

என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையினில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வாழ்க்கை தெரிந்தும் தொலைத்து போகிறேன்
காதல் என்றால் ஓ….
பொல்லாதது
புரிகின்றது ஓ….

(ஒரு தேவதை..)

கண்கள் இருக்கும் காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ….
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே

(ஒரு தேவதை..)







பாடியவர்: ரூப்குமார்
படம்: வாமணன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா




ஓம் நமோ நாராயணாய‌...





ஓம் நமோ நாராயணாய‌
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றால்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அட்ச அட்சரம் பார்க்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது
ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுத்தம் தான்
(கல்லை மட்டும் கண்டால் )
இல்லை என்று சொன்ன போதும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
(இல்லை என்று சொன்னபோதும்.)
வீர சைவர்கள் முன்னால் எங்கள்
ஈர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
(கல்லை மட்டும் கண்டால்..)
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
(நீருக்குள்ளே மூழ்கினாலும்..)
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது





படம்: தசாவதாரம்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: ஹரிஹரன்
இசை: ஹிமேஷ் ரேஷ்மையா

என் நாவில் இருப்பது சரஸ்வதியே





பெண்:
என் நாவில் இருப்பது சரஸ்வதியே
என்னை பாட வைப்பது கணபதியே
கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமன் இல்லை
கோகுலத்தில் நானா
சோகம் இல்லை சொந்தம் யாருமில்லை
இராவனின் நெஞ்சில் காமம் இல்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
அ அஹா அ அஹா……..
ஹா……….ஹா……….
ஆசைக்கொரு ஆளாவன்
ஆனந்தத்தின் கூத்தானவன்
கோபியர்கள் நீராடிட
கோலங்களை கண்டானவன்
ஆடை எண்ணி கொண்டானவன்
அழகை அள்ளி தின்றானவன்
போதையினிலே நின்றானவன்
பூஜைக்கு வந்தானவன்
அவன் உலா உலா உலா உலா
தினம் தினம் பாரி
ஒரு விழா விழா விழா விழா
வாழ்க்கையில் தேவை
கண்ணா உன்னை நாள்தோறுமே
கைக்கூப்பியே நான் பாடுவேன்

கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமன் இல்லை
கோகுலத்தில் நானா….
ஆண்:
சோகம் இல்லை சொந்தம் யாருமில்லை
இராவனின் நெஞ்சில் காமம் இல்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
பெண்:
தந்தனா திந்தனானா ம்….
தந்தனா திந்தனானா ம்….
தந்தனா திந்தனானா
தில்லன்னா தில்லன்னா…..
ஆண்:
ஆசைக்கொரு ஆளாகினான்
கீதையெனும் நூலாகினான்
யமுனை நதி நீராடினான்
பாண்டவருக்கு போராடினான்
ஆடை அள்ளி கொண்டாடினான்
திரெளபதிக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான்
பெண்ணை கண்டு கைக்கூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா நிலா
வந்தது வீதி
திருவிழா விழா விழா விழா
ஆனது வீடே
என் வாழ்க்கையே பிருந்தாவனம்
நான் ஆகவே நான் வாழ்கிறேன்
கோகுலத்து கண்ணா கண்ணா
லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால்
நீயும் வருவாயா
ஆயிரம் பேர் காதலித்தால்
ருக்மணியை கைப்பிடித்தாய்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பெளர்ணமியே…….

யார் யார் சிவம்?







யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம், அன்பே சிவம்
ஆதிக்கம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்
ஆதிக்கம் வீசும் நல்லவர்க்கோ அன்பே சிவமாகும்
அன்பே சிவம், அன்பே சிவம், என்றும்
அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்
அன்பே சிவம், அன்பே சிவம், என்றும்
அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்
இதயம் என்பது சக்திதான் என்றால் எரித்தால் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
யார் யார் சிவம்? நீ நான் சிவம்
அன்பின் பாதை சரிந்தவனுக்கோ முடிவே இல்லையடா
மனிதன் நிலம் எதுவோ அதுவே வாழ்வின் நிலமடா
அன்பே சிவம், அன்பே சிவம், என்றும்
அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்
அன்பே சிவம், அன்பே சிவம், என்றும்
அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்………..

20090921

முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா...






பல்லவி
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா
(முகுந்தா முகுந்தா...)
வெண்ணை உண்ட வாயால் ம‌ண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாகவா
(முகுந்தா முகுந்தா... )
என்ன செய்ய நானும் தோல் பாவை தான்
உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவை தான்
(முகுந்தா முகுந்தா..)

குழு: ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
சீதா ராம் ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

சரணம் 1
நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீ அறியாச் சேதி இல்லை எங்கள் கிருஷ்ண ஸ்வாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்துப் பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கைத் தீர்ப்பாய்
உன் ஞானம் தோற்றிடாத விஞ்ஞானம் ஏது
அறியாதார் கதைபோலே அஞ்ஞானம் ஏது
அன்று அர்ச்சுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
உன்மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
வாராது போவாயோ வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே

ஹே.. முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா

சரணம் 2
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமனன் போல் தோற்றங் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த் சிம்மமாகி இரணியனைக் கொன்றாய்
இராவணன் தன் தலையைக் கொய்ய இராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்
இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால் திருமணம் ஆகும் ஏந்திழை ஏங்குகிறேனே
மயில் பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே

(முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா)








படம்: தசாவதாரம்
பாடியவர்: சாதனா சர்கம்
இசை: ஹிமேஷ் ரேஷ்மையா
பாடல்: வாலி

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...










குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (2)

அனுபல்லவி [சிவ ரஞ்சினி ]

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1[சிவ ரஞ்சினி ]

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 2 [காபி ]

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் (2)

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா (2)


சரணம் 3 [காபி ]

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 4 [சிந்து பைரவி ]

கல்லிலார்க்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா (2)

சரணம் 5 [ சிந்து பைரவி ]

குறை ஒன்றும் இல்லை

யாதும் மறுக்காத மலையப்பா (2)- உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு (2)

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)

மணிவண்ணா மலையப்பா

கோவிந்தா கோவிந்தா (3)