Showing posts with label நாடோடிகள். Show all posts
Showing posts with label நாடோடிகள். Show all posts

20091124

உலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது




உலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதலாகாது
எல்லாமே சந்தர்ப்பம் கற்பிக்கும் தப்பர்த்தம்
(உலகில்..)

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு
அவன் இல்லாது அடுத்தவன் வாழ்வை ஏற்பதுப் பெரும்பாடு
ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன்
இருட்டொளி எறும்பானாய்
பாசத்துக்காக காதலைத் தொலைத்து ஆலையில் கரும்பானாய்
யார் காரணம் யார்
யார் பாவம் யாரைச் சேரும் யார்தான் சொல்ல 
கண்ணீர் வார்த்தா கண் நீர் ஆகும்
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் வாழ்நிலை
உணர்வைப் பார்ப்பதேது உறவின் சூழ்நிலை

மனம் என்னும் குளத்தில் விழியென்னும் கல்லை
முதன் முதல் எறிந்தாளே
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே
நதி வழிப்போனால் கரைவரக்கூடும் விதிவழிப்போனானே
விதை ஒன்றுபோட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே
என் சொல்வது என் சொல்வது
தான்கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தாய்
கற்பைப்போலே நட்பைப் பார்த்தான்
காதல் தோற்கும் என்றாப்பார்த்தான்
(உலகில்..)


பாடியவர்: ஹரிஹரன்
படம்: நாடோடிகள்
இசை:சுந்தர் சி பாபு