20100228

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...




எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது


கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தை பாசிமணிகள்
தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும் முன்னே புன்னகை செய்வாய்
அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய்
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது


பாடல்: வைரமுத்து.
படம்: கேப்டன் மகள்
இசை: இளையராஜா

20100227

என்னவென்று சொல்வதம்மா...




என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
(என்னவென்று..)

தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
கொத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தோற்க்கும் தாமரை
வண்ணப் பூவின் வாசம்
வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்
என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ


கண்ணோடு ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீராடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்
என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ


பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
படம்: ராஜக்குமாரன்
இசை: இளையராஜா

20100226

அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் ...





அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்



நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்தபோது
எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்





ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் ஏங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்


பாடியவர்: சித்தார்த்
படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்

20100225

காதலுக்கு கண்கள் இல்லை ...



காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதென்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்....
லூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே
பீச்சில் வந்து சுண்டல் தீர்ந்து போச்சு என்றாலே
காதல் கூட தீரும் என்றேன் நானே
ஒ ஒ ஒ என்ன ஆனதோ ஹார்மோன்கள் கொஞ்சம் மாறுதோ
ஒ ஒ ஒ எந்த நாள் முதல் என் காதல் அவள் ராகத்தில்
(காதலுக்கு...)

அப்பன் காசெல்லாம் செல் போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
தன்னந் தனிமையிலே தானே பேசையிலே
நைட் அடிச்ச மப்பு இன்னும் இறங்கல என்றேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதல் என்னை என்ன செய்யும்
ஓவர் திமிரில் அழைந்தேன் நானே
நானும் இன்று கியூவில் நின்று
இதயத்தை பறி கொடுத்தேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு..)

ஓ கண்ணில் நுழைவாளாம் நெஞ்சில் நுழைவாளாம்
ஏண்டா இந்த பில்டப் என்று கூலா கேட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்து பார்க்க ஆசை பட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்,,,
கோடிப் பொய்கள் கட்டிய மூட்டை 
காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக 
மெய்யினில் உணர்ந்து கொண்டேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு...)


பாடியவர்: தேவிஸ்ரீ பிரசாத்
படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்


20100224

உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்




உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..

ஒரு ஞாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதல் செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே 
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
ஹேய்..
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..

ஆஹா எது இதுவோ
எது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள்
ஏன் என்று நான் சொல்லுவேன்
இது அதுவோ.. ம்ம்ம்...
இது அதுவோ
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களோ

பெண் தோழன் நான்
ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆண் ஆசை நான்
பெண் ஆசை நீ
ஆசைகள் பேர் ஆசைதான்
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..

ஓஹோ உனதருகே
இருப்பதனால்
இரவுக்கு தெரியாத
பகலுக்கு புரியாத
பொழுதொன்று நீ காட்டினாய்
இதயத்தில் நீ
இருப்பதனால்
நான் தூங்கும் நேரத்தில்
என் உள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்
கண்ணாடி நீ
கடிகாரம் நான்
உன் உள்ளே நான் ஓடோடி வாழ்வேன்
காதல் எனும் கடுதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
ஹேய்..
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..



பாடியவர்கள்: கார்த்திக், சுமங்கலி
படம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்

20100223

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல...




சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!

உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!

கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!

Ha.. Ha.. Ha..
Ha.. Ha.. Ha..

ஓ..
நதியே நீ எங்கே என்று
கரைகள் தேடக் கூடாதா!
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேடக் கூடாதா!

ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் நொடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் யார் அறிவார்

அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே
பூவின் உள்ளே நிலவின் கீழே
தீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே
உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில் 
உள்ள வழியே..

எனக்கே நான் சுமையாய் மாறி
என்னைச் சுமந்து வந்தேனே!
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னைத் தேடி வந்தேனே!

விழி நனைத்திடும் நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும் உன்னை எந்தன்
உயிர் ஒதுக்கி விடாது

உலகம் ஒரு புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
ஒரு இமையெங்கிலும் தேனில் மூழ்க
ஒரு இமை மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும் காணுமோ!

உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை 
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!



பாடியவர்கள்: ஜாவட் அலி,மதுஸ்ரீ
படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா





20100216

யாரடி நீ யாரடி ...



யாரடி 
நீ யாரடி
சொல்லடி 
நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்

உன் விழி என் விழி இணைய வேண்டுமே
கைகளில் காதலை வழங்க வேண்டுமே
வறண்டு கிடக்கும் இவன் நெஞ்சிலே
துளி நீர் தெளி
ஈரங்கள் சுமந்து வரும் வான்வெளி
என் காதலி என் காதலி

போனதே உயிர் போனதே

உன் முகம் பார்த்து நான் சிவந்து போகிறேன்
உன் விழி பார்த்து நான் மயக்கம் ஆகிறேன்
மழையும் வெயிலும் இவன் கண்களில் 
தினம் பார்க்கிறேன்
புயலும் இசையும் இவன் மூச்சிலே
உண்டானதால் திண்டாடுறேன்

யாரடி 
நீ யாரடி
சொல்லடி 
நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்

பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல்
படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்

20100208

தேடி தேடியே...


தேடி தேடியே மின்னல்
உள் நெஞ்சில் பாய்கிறதே
ஓடும் காலமே சற்று
எனை நின்று பார்க்கிறதே
சுற்றும் பூமியே என்னை
ஒரு வட்டம் இடுகிறதே
உனை பார்க்கும்போதே 
பார்க்கும்போதே பார்க்கும்போதே

மாயா 
நீ மாயா 
தீ வைத்தாயா
மாயா இல்லை மெய்யா 
உன் அனலாலே
சரிகம 
எனை தகித்தாயே
உன் நினைவாலே 
மனதினில் பனி பொழிந்தாயே
பாவையாலே காயம் ஆனேன்
மூங்கில் பாட்டானேன்

மாயா 
ஆடி பாடி வரும் வன்முறையா நீ 
மாயா 
பிஞ்சு குழந்தையின் முதல் சிரிப்பா நீ 
மாயா

வா...டா..

மெல்ல மெல்ல தொடும் வஞ்சி இனமா நீ
தொட்டுவிட்டு செல்ல விடுகதையா நீ

வா...டா...


சத்தம் இன்றி நானா 
உள்ளம் கலைத்தேனா
உன்னை கனிந்தேனா 
சித்தம் சிதைத்தேனா
எங்கும் நிறைந்தேனா
கோடி சூரியனை போல் நெஞ்சில் உதித்தாய்
கொஞ்சும் வெண்ணிலவை போல் என்று மலர்ந்தாய்

பாவையாலே காயம் ஆனேன்
மூங்கில் பாட்டானேன்

ஏதோ ஏதோ புது மாற்றம்
உன் கண்ணில் தெரிகிறதோ
மௌனமாக உன் இதயம்
உனை விட்டு செல்கிறதோ
வேறு வேறு நாம் இல்லை
என காற்றும் சொல்கிறதோ

நமை பார்க்கும்போதே பார்க்கும்போதே
பார்க்கும்போதே பார்க்கும்போதே

ஏதோ ஏதோ புது மாற்றம்
உன் கண்ணில் தெரிகிறதா
மௌனமாக உன் இதயம்
உனை விட்டு செல்கிறதா
வேறு வேறு நாம் இல்லை
என காற்றும் சொல்கிறதா

நமை பார்க்கும்போதே பார்க்கும்போதே
பார்க்கும்போதே பார்க்கும்போதே

மாயா
உயிர் என்பாயா
உறவென்பாயா
காத்திருந்தாயா
ஓ..ஓ..

பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஜனனி
படம்: முன்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடல்: ரோஹினி











20100203

மனதின் அடியில் மழை தூரல்...


மனதின் அடியில் மழை தூரல்
இதமாய் விழுந்தால் அது காதல்
முதலில் விழி வழியில் நுழையும்
மெதுவாய் உயிர் வரையில் நிறையும்
முழுதாய் சுயம் உடைத்தே கரையும் உறையும்
இளமை எரியும்

தீம் தனனன தீம் தனனன
தினம் வானம் நிறம் மாறும்
தீம் தனனன தீம் தனனன
மனம் தெரிந்தே பறிபோகும்

சரி எது என தெரியும் முன்னே
அதன் போக்கில் நமை மாற்றும்

மனதின் அடியில் மழை தூரல்
இதமாய் விழுந்தால் அது காதல்

பார்வைகளின் ஆழத்திலே
உள்ளம் கொஞ்சம் மூழ்கிப்போகும்
வார்த்தைகளின் வாசத்திலே
மௌனம் இதழ் பூக்கும்

மகரந்த வெயில் வழிகிற மஞ்சள்
தருகிற புது பரவசம் நெஞ்சில்
இனம் புரியா கலவரம் இதுதானா

ஏதோ ஒன்று உள்ளே நின்று
உன்னை கட்டி இழுக்கும் இழுக்கும்
தொலைந்ததை தேடிச் சென்று
இருப்பதை தொலைக்கும்

உயிர்வரை ஒரு வலி வந்து தீண்டும்
பலமுறை அது வரையறை தாண்டும்
அடம் பிடிக்கும் இதயம் சரிதானா

மனதின் அடியில் மழை தூரல்
இதமாய் விழுந்தால் அது காதல்

முதலில் விழி வழியில் நுழையும்
மெதுவாய் உயிர் வரையில் நிறையும்
முழுதாய் சுயம் உடைத்தே கரையும் உறையும்
இளமை எரியும்

தீம் தனனன தீம் தனனன
தினம் வானம் நிறம் மாறும்
தீம் தனனன தீம் தனனன
மனம் தெரிந்தே பறிபோகும்

சரி எது என தெரியும் முன்னே
அதன் போக்கில் நமை மாற்றும் ஓ..ஓ

பாடியவர்: பிரியதர்ஷினி
படம்: முன்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடல்: பிரியன்

பேசும் பூவே ..


பேசும் பூவே பேசும் பூவே
காதல் வீசும் கன்னி தீவே
வானம் பூமி காணவில்லை
ஏது செய்தாய் கூறடி

என் உயிரும் பூத்ததே 
உன்னையே எண்ணி
என் உலகம் ஏங்குதே 

பெண்ணே உன் கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் 
என்னை ஈர்த்ததா?
ஈர்த்ததா ஈர்த்ததா?

காதல் காற்றே
காதல் காற்றே
கலைந்து போனேன்
உன்னை பார்த்தே

I like your eyes
I like your smile
The way you talk
You are so inviting

மமதையோடு திரிந்த நாட்கள்
முழுதும் மாற்றி உணர வைத்தாய்
உன் பார்வையால் உன் பார்வையால்

முந்தினம் முந்தினம் உன்னை பார்த்தேனே
என் பெயர் என்னையே நானும் கேட்டேனே
எந்திரம் எந்திரம் போல ஆனேனே

அன்பே 
உன் சொற்களா உன் மௌனமா 
உன் மென்மையா உன் உண்மையா 
உன் உள்ளமா உன் கள்ளமா 
உன் வீரம்தான் 
எனை கொன்றதா
உன் மீசையா 
உன் தோள்களா உன் தோற்றமா 
உன் பார்வையா உன் வேர்வையா
உன் மச்சமா உன் அச்சம்தான் 
எனை தின்றதா

என் உயிரும் பூத்ததே
உன்னையே எண்ணி எண்ணி
என் உலகம் ஏங்குதே

பெண்ணே உன் கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் 
என்னை ஈர்த்ததா?

பேசும் பூவே பூவே..பூவே..

பாடியவர்கள்: கிரீஷ், சுசித்ரா
படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடல்: விவேகா

முதல் முறை இவன்...



முதல் முறை இவன் உயிருக்குள் மாற்றம்
இனம் புரியா அவஸ்தையின் கூட்டம்
எதிரினில் ஒரு அழகிய தோட்டம்
ஜாடை காட்டும் ஜாடை காட்டும்
இடம் தடம் இவன் மறந்தான் மறந்தான்
இவள் முகம் கண்டு கரைந்தான் கரைந்தான்
சுகத்தில் விண்வெளியில் மிதந்தான்
உரைந்தான் உடைந்தான்

இன்றே இன்றே உன்னால் இங்கே
முழுதாய் நானும் புதிதானேன்
அடை மழை போலே உன் அழகாலே
உயிர் வரை நானும் நனைகின்றேன்
பெண்ணே உன் கண்ணில் சிக்கிக்கொண்டேன்
தப்பிக்கத் தானே
நான் மறந்தேன் ஏன் மறந்தேன்
நதி மீது நகரும் இலையை போலே
அன்பே நான் மிதந்தேன்
உனக்குள் நான் 
விழுந்தேன் தொலைந்தேன் 
புதிதாய் பிறந்தேன்

முதல் முறை இவன் உயிருக்குள் மாற்றம்
இனம் புரியா அவஸ்தையின் கூட்டம்
எதிரினில் ஒரு அழகிய தோட்டம்
ஜாடை காட்டும் ஜாடை காட்டும்
இடம் தடம் இவன் மறந்தான் மறந்தான்
இவள் முகம் கண்டு கரைந்தான் கரைந்தான்
சுகத்தில் விண்வெளியில் மிதந்தான்
உரைந்தான் உடைந்தான்

இன்றே இன்றே உன்னால் இங்கே
என்னுள் ஏதோ பரவசமே
முதலெது தெரியா முடிவெது புரியா
நிலையும் மாறி உன் வசமே
சொன்னாலும் கேட்காமல் என் நெஞ்சம்
உனைச் சுற்றித் திரியும்
அதை ரசிப்பேன்
அன்பை தேடி
நான் ஏன் கால்கள் மாறிப் போனேன்
பதிலெதும் இல்லை
என்னிடம்தான்
இருந்தும் தொடர்ந்தேன்
சிறகை உணர்ந்தேன்.

இன்றே இன்றே இன்றே இன்றே
இன்றே இன்றே இன்றே இன்றே
ஒ...ஒ...
இன்றே இன்றே இன்றே இன்றே

பாடியவர்கள்: ரஞ்சித், சுசித்ரா
படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடல்: பிரியன்

20100202

கண்ணுக்குள் கண்ணை...



கண்ணுக்குள் கண்ணை ஒட்டிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும் 
பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா

உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா

கண்ணுக்குள் கண்ணை ஒட்டிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா

நீயும் நானும்
ஒரே புள்ளி ஒரே கோடு
நீயும் நானும் வாழப் போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று

கண்ணுக்குள் கண்ணை ஒட்டிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும் 
பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா

உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா

பாடியவர்: நரேஷ் ஐயர்
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடல்: தாமரை

20100201

எங்கே எங்கே மனிதன் எங்கே...



எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடையில் மிருகம் இங்கே
ஓநாய் உள்ளம் நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே
வலிகளால் அந்த வரங்களால்
வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்

காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவும் நட்பும் பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
பொய்களின் கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி

ஜனனம் உண்மை மரணம் உண்மை
தந்தானே கடவுள் தந்தானே
அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யாய் 
செய்தானே மனிதன் செய்தானே

கடுகை பிளந்து காணும் போது 
வானம் இருந்திடக் கண்டேன்
நான் உறவை திறந்து காணும் போது
உலகம் தெரிந்திடக் கண்டேன்
என் உடலைத் தொட்டாய் நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால்... நான் கடவுள் ஆவேன்

இங்கே இங்கே மனிதன் இங்கே
இமயம் தாங்கும் இதயம் இங்கே
காடும் மரமும் என் காலில் பூக்கள்
குன்றும் மலையும் கூலாங்கற்கள்
சம்பலில் உயிர்க்கும் பறவைபோல்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
படம்: அசல்
இசை: பரத்வாஜ்

ஏன் இதயம் உடைத்தாய்


ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஹோ ஹோசானா ஹோசானா
ஹோ ஹோ ஹோசானா ஹோசானா ஹோ

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து 
கந்தல் ஆகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம் 
காற்றோடு போயே போச்சே

ஹோசானா என் வாசல் தாண்டி போனாளே
ஹோசானா வேறு ஒன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் 
சுக்கு நூறாகிறேன்
அவள் போன பின்பு 
எந்தன் நெஞ்சை தேடிப் போகிறேன்
ஹோ..சானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோ..சானா சாவுக்கும் பக்கம் வந்தேன்
ஹோ..சானா ஏன் என்றால் காதல் என்பேன்
ஹோ..சானா

everybody wanna know what we like-a feel like-a
I really wanna be here with you
It's not enough to say that we're made for each other
It's love that is hosaana true hosaana, 
be there when you callin out my(me) name hosaana, 
feeling like my(me) whole life has changed
I never wanna be the same
It's time we rearrange
I take a step, you take a step
I'm here callin out to you 

ஹல்லோ ஹல்லோ ஹல்லோ
யோ யோ ஹோ..சானா ஹோ..சானா
ஹோ ஹோசானா ஹோ
ஓ.. ஹோ... ஓ... ஹோ...
ஓ.. ஹோ... ஓ... ஹோ...
ஓ.. ஹோ... ஓ... ஹோ...
ஓ.. ஹோ... ஓ... ஹோ...
ஓ.. ஹோ... ஓ... ஹோ...


வண்ண வண்ண பட்டுப்பூச்சி பூத் தேடி பூத் தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஓ சொட்டு சொட்டாய் தொட்டு போக
மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோ.சானா பட்டுப்பூச்சி வந்தாச்சா
ஹோ.சானா மேகம் உன்னை தொட்டாச்சா
கிழிஞ்சலாகிறாய் நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்திக் கொள்கிறேன்

ஹல்லோ ஹல்லோ ஹல்லோ ஓ...ஹோசானா
ஹோ...சானா என் மீது அன்பு கொள்ள
ஹோ...சானா என்னோடு சேர்ந்து செல்ல
ஹோ...சானா உம் என்று சொல்லு போதும்
ஹோ...சானா 

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், பிளாஸே, சுசனே-டி-மெலொ
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்

அன்பில் அவன் சேர்த்த...



அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக 
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக 
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக 
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
இன்று இங்கு அதை பயின்றோம்

பூமி வானம் காற்று
தீயை நீரை மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு
நீ வானவில்லாக 
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக 
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே
நீ வானவில்லாக 
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே

பாடியவர்கள்: தேவன், சின்மயி
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடல்: தாமரை

ஊனே உயிரே...



ஊனே உயிரே
உனக்காக துடித்தேன்
விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

நேற்றும் இரவில்
உன்னோடு இருந்தேன்
அதை நீயும்
மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட
விண்ணைத்தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன்
விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா

உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில்தானே
இரு துருவம் சேரும் அந்த ஓர் இடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே.....

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா


பாடியவர்: கார்த்திக்
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்