Showing posts with label YARADI NEE MOHINI. Show all posts
Showing posts with label YARADI NEE MOHINI. Show all posts

20110905

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ...

20110901

எங்கேயோ பார்த்த மயக்கம் ...




எங்கேயோ பார்த்த மயக்கம் 
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம் 
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது 
கடவுளை இன்று நம்பும் மனது

20091124

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு...





ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
ஒரு வானத்தை தொடுகின்ற உணர்வு
ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் ஒடுக்கம்
நின்றாலும் கால்கள் மிதக்கும்
(ஒரு நாளுக்குள்..)

நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறி போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போவேன்
இது ஏதோ புரியா உணர்வு
இதை புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனி மலை ஒரு எரிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்
(ஒரு நாளுக்குள்..)

நதியாலே பூக்கும் மரங்களுக்கும்
நதி மீது இருக்கும் காதல் இல்லை
நதி அறியுமா நெஞ்சம் புரியுமா
கரையோர கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டாள்
நீ பார்க்காமல் உன்னை மறக்கலாம்
இனி காதல் கனவுகள் பிறக்கும்
தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் தெரியாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அதுவரையில் நடப்பது நடக்கும்
( ஒரு நாளுக்குள்..)


பாடியவர்: கார்த்திக்
படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா