20101231

தோகை இளமயில் ...




தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் 
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம்
படம் : பயணங்கள் முடிவதில்லை
இசை : இளையராஜா
பாடல்: வைரமுத்து.

நீதானே எந்தன் பொன்வசந்தம்...









நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா...
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என் நாளும்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்



ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் என் நாளும்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்


பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து

20101230

தெய்வீக ராகம் ...



தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல் 
கேட்டாலும் போதும் 
இள நெஞ்சங்கள் வாடும்
ம்ம்ம்..... ஆஆஆ....
தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல்

செந்தாழம் பூவைக்கொண்டு 
சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து 
தேலாடும் கரையில் நின்றேன்
பாரட்ட வா.... சீராட்ட வா...
நீ நீந்த வா... என்னோடு... 
மோகம் தீருமே....
ம்ம்ம்... ஆஆஆ.... 

தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல் 
கேட்டாலும் போதும் 
இள நெஞ்சங்கள் வாடும்

தழுவாத தேகம் ஒன்று 
தனியாத மோகம் கொண்டு
தாலாட்ட தென்றல் உண்டு 
தாழாத ஆசை உண்டு
பூமஞ்சமும் தேன் கிண்ணமும்
நீ தேடி வா... ஒரே ராகம்...
பாடி ஆடுவோம் வா

ம்ம்ம்... ஆஆஆ.... 

தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல் 
கேட்டாலும் போதும் 
இள நெஞ்சங்கள் வாடும்


பாடியவர்: ஜென்சி
படம் : உல்லாச பறவைகள்
இசை: இளையராஜா
பாடல் : தசரதன்

20101229

விழியிலே மலர்ந்தது ...



விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

உன் நினைவே போதுமடி 
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும் 
பொன் விளக்கே தீபமே 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் 
ஓரழகைக் கண்டதில்லையே 

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் 
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி 
கண்களுக்கு விளைந்த மாங்கனி 
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

கையளவு பழுத்த மாதுளை பாலில் 
நெய்யளவு பரந்த புன்னகை 
கையளவு பழுத்த மாதுளை பாலில் 
நெய்யளவு பரந்த புன்னகை 
முன்னழகில் காமினி 
பின்னழகில் மோகினி 
மோக மழை தூவும் மேகமே 
யோகம் வரப் பாடும் ராகமே 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 
எங்கெங்கும் உன்னழகே 


பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம். 
படம்: புவனா ஒரு கேள்விக்குறி
இசை : இளையராஜா 
பாடல்: பஞ்சு அருணாசலம் 

20101217

விண்ணைக் காப்பான் ஒருவன்...



விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பவனே நல்லச் சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி-அட
ஆட்டமுன்னா என்னவென்னு ஆடிக்காமி
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

ஏறு முன்னேறு ஏறு 
பேரு வரும் பேரு பேரு
ஊரு அட யாதும் இங்க நம்ம ஊரு
ஓடு தெம்போடு போடு 
கூடு அன்போடு கூடு
வாழ்வில் அட வந்து போகும் பள்ளம்மேடு

எடுடா மேளத்த தாளத்த வேகத்த இனிமேதான் வித்த
மொத்தக் கூட்டத்த கூட்டித்தான் கொண்டாடு..

நம்ம சொந்தத்த பந்தத்த நெஞ்சத்த திருநாளில் கண்டு
ஒன்னாஉறவாடு அன்போட விளையாடு

ஆலாலகண்டனே ஆட்டத்துக்கு மன்னனே
ஆனந்தத் தாண்டவம் ஆடுவோமே
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்

யாரு இள நெஞ்சில் யாரு 
கூறு அவன் காதில் கூறு
ராதை மனம் சொன்னதெல்லாம் கண்ணன் பேரு

ஊரு திருநாளில் ஊரு 
ஓடும் திருவாரூர் தேரு
ஆட்ட பலி கேட்டதில்ல ஐயனாரு

அன்பின் வழியொன்று மொழியொன்று 
என்றானால் உலகெல்லாம் ஒன்று
வெற்றிக் கொடிகட்டு பறக்கட்டும் முன்னாலே
அச்சம் விலகட்டும் விலகட்டும் மறையட்டும் 
அதைத் தூக்கிப் போடு
வீரம் விளையட்டும் விளையட்டும் மண்மேலே

நான் பாட்டுப் பாடுனா நாடாடும் ஆடும்ன்னா
நல்லசேதி யார்சொன்னாலும் கேட்டுப் போன்னா
விண்ணைக் காப்பான் ஒருவன் 
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் 
அவனே அவனே இறைவன்
எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பவனே நல்லச் சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி-அட
ஆட்டமுன்னா என்னவென்னு ஆடிக்காமி


பாடியவர்கள்: திப்பு, ஸ்வேதா
இசை: வித்யாசகர்
படம்: காவலன்
பாடல்: பா விஜய்

20101216

Step Step Step it up...



one two three...
Step Step Step it up
இளமை அழைக்குது Step it up
இதயம் பறக்குது Step it up
Step it up

Step Step Step it up
உன்னுள் மின்னல் light it up
உச்சம் வரைக்கும் keep it up
Step it up

உற்றுப் பார் உலகம் எல்லாம் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அருகில் இன்பத்தீயை மூட்டிடும்
உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

Step Step Step it up
இளமை அழைக்குது Step it up
இதயம் பறக்குது Step it up
Step it up


கால் சட்ட மேல் சட்ட 
லூசாகப் போட்டுட்ட
நட்பாக யாரோடும் 
சேர மறுத்திட்ட
இப்போது விண்முட்ட 
புதுசாக எழுந்திட்ட
தோனுது கைதட்ட 
அடடா உசந்திட்ட

ஆற்றில் ஆடும் மீனடி 
காட்டில் துள்ளும் மானடி
எங்கும் எதிலும் நானடி பாரடி

புது வேஷம் 
புது வேகம்
புதிதான ஆளுதான்

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ

Step Step Step it up
இளமை அழைக்குது Step it up
இதயம் பறக்குது Step it up
Step it up

பாக்கத்தான் சிறுபுள்ள 
கலக்குற பயபுள்ள
இளம்பெண்கள் நினைப்புல 
நீதான் மாப்பிள்ள

ஏமாந்த ஆளில்ல 
நான் முன்னப் போலில்ல
பாரேண்டியென் ஆட்டம் 
யாரும் இணையில்ல

டுன் டுன் டுன் ஒலியுடன் 
அதிரும் கால்கள் உன்னுடன்
ஆடு கொஞ்சம் என்னுடன் என்னுடன்

கைகோர்த்து… 
மெய் சேர்த்து 
உயிர் பூத்து ஆடலாம்…

one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ
one two three four
யம்மம்மோ யம்மம்மோ
five six seven eight
யம்மம்மோ யம்மம்மோ


பாடியவர்கள்: பென்னி, மேக்ஹா
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்
பாடல்: விவேகா

20101215

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது ...




ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது
     பேசக் கூடாதே

ஆ : யானைத் தந்தத்தின் சிலை நீயே 
    ஏறும் தங்கத்தின் விலை நீயே

பெ : காதல் வீசிய வலை நீயே
     என்னைக் கட்டி இழுத்தாயே

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

பெ : எதைத்த தருவது தானென்று 
     எதைப் பெறுவது தானென்று
     குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல 
     இதயம் குதித்தோட

ஆ : தலையசைக்குது உன் கண்கள்
    தவிதவிக்குது என்நெஞ்சம்
    ஒரு தீ போல ஒருத்தி வந்து 
    உயிரைப் பந்தாட

பெ : ஞாபகம் உன் ஞாபகம்
     அது முடியாத முதலாகும்

ஆ : பூமுகம் உன் பூமுகம்
    அது முடியாத முதல் பாகம்

பெ : பெண்கவிதை இவள்தானே 
     உன் இதழால் படிப்பாயோ
     கண்ணிமையால் எனை மூடி 
     காதல் திறப்பாயோ

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
     பூவே ஓடாதே

பெ : ஓய் ஓய் காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

ஆ : அலைவரிசையில் நீ சிரிக்க 
     தொலைத்தொடர்பினில் நான் இருக்க
     உதடும் உதடும் பேசும் போது 
     உலகை மறந்தேனே

பெ : உனதருகினில் நானிருக்க 
     உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க
     இரண்டாம் முறையாய் இதயம் துடிக்கப் 
     புதிதாய்ப் பிறந்தேனே



ஆ : மாலையில் பொன் மாலையில் 
    உன் மடி மீது விழுவேனே

பெ : மார்பினில் உன் மார்பினில் 
     நான் மருதாணி மழை தானே

ஆ : வெண்ணிலவோ நெடுந்தூரம் 
    பெண்ணிலவோ தொடுந்தூரம்
    உன்மழையில் நனைந்தாலே 
    காய்ச்சல் பறந்தோடும்

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே

ஆ : யானைத் தந்தத்தின் சிலை நீயே
    ஏறும் தங்கத்தின் விலை நீயே

பெ : காதல் வீசிய வலை நீயே
     என்னைக் கட்டி இழுத்தாயே


பாடியவர்கள்: கே,கே, ரீட்டா
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்
பாடல்: கபிலன்

20101214

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்...


சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
அவள் நேரத்தில் வருவாளா காக்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலச் சிரிப்பாளா
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா
கொஞ்சிக் கொஞ்சிக் காதல் செய்து கொல்வாளா

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்


கட்டுத் தறியின்றி எனதுள்ளம் 
உனை எண்ணிக் கொண்டு
அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே
சொல்ல மொழி இன்றி தமிழ்சொற்கள் 
எனை விட்டு விட்டு
அந்தரத்தில் அம்மி கொத்துதே

காதல் தெருவிலே எனதாசை அலையுதே
நீங்கா நினைவிலே நிழல் கூட வெளுக்குதே
குரலாலே என்னில் குடியேறிக்கொண்ட
கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னைக் குத்துதே
சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கங்கை நதி வெள்ளம் 
சிறு சங்குக்குள்ளே சிக்கிக் கொண்டு
அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னம் சிறு பிள்ளை 
ஒரு சொப்பனத்தை வைத்துக் கொண்டு
கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே

நீ என் எதிரிலே 
வரவேண்டும் விரைவிலே
நேரில் வரும் வரை 
முகம் காட்டு கனவிலே

மெதுவாகச் செல்லும் கடிகாரமுள்ளும்
உனைக் காணச் சொல்லி 
ஹையையையோ நச்சரிக்குதே 
சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சடசட சடசட மழையெனக் கொஞ்சம்
தடதட தடதட வெயிலெனக் கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
அவள் நேரத்தில் வருவாளா காக்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலச் சிரிப்பாளா
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா
கொஞ்சிக் கொஞ்சிக் காதல் செய்து கொல்வாளா

பாடியவர்: கார்த்திக்
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்.
பாடல்: யுகபாரதி

20101213

யாரது யாரது யாரது யாரது ...



யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது 
சொல்லாமல் என் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் என்கண்ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது 

நெருங்காமல் நெருங்கி வந்தது 
விலகாமல் விலகி நிற்பது
விடையாகக் கேள்வி தந்தது 
தெளிவாகக் குழம்ப வைத்தது

யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது

என்னிலொரு சடுகுடுசடுகுடு 
காலை மாலை நடக்கிறதே

கண்ணில் தினம் கதகளி கதகளி 
தூங்கும் போது தொடர்கிறதே

என்னிலொரு சடுகுடுசடுகுடு 
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி 
தூங்கும் போது தொடர்கிறதே
இரவிலும் அவள் பகலிலும் அவள் 
மனதினைத் தருவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள் 
நிழலெனத் தொடர்வது புரிகிறதே

இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே

யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது

உச்சந்தலை நடுவினில் அவளொரு 
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சைராச்சியம்தொடங்குகிறாள்
அவளிவளென எவள் எவளென 
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட 
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்

இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள்

யாரது யாரது யாரது யாரது 
யாரது யாரது யாரது யாரது
சொல்லாமல் என் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் என் கண்ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது 
விலகாமல் விலகி நிற்பது
விடையாகக் கேள்வி தந்தது 
தெளிவாகக் குழம்ப வைத்தது


பாடியவர்கள்: கார்த்திக், சுசித்ரா
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்
பாடல்: யுக பாரதி 

20101119

மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய பாடல் - 1


கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கை கோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமம்மெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக் கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று
இயற்றத் துணியும் அணி சேர்த்துக் கொள்.

படம்: மன்மதன் அம்பு
பாடல்: கமல்ஹாசன்
இசை:தேவி ஸ்ரீப்ரசாத்

மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய பாடல் - 2



கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும் 
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்

காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட
நின்றவன் உதவிட வேண்டும்
சமயலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்

மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்
பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்
மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்

பொடி நடைபோட்டே இடை மெலியவெனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்போனேன்

வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்
திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ? 
அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ
அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதே!!


படம்: மன்மதன் அம்பு
பாடல்: கமல்ஹாசன்
இசை:தேவி ஸ்ரீப்ரசாத்


20100922

வா வா நிலவப்புடிச்சித்தரவா...

வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா


வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா


வானத்தில் ஏறி ஏணிக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ

கவலை நம்மை சில நேரம் கூரைப்போட்டுக்கொண்டாடும்
நீ என்னைத் தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலைச்சேரும் நதியாவும் தன்னைத்தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும் 
அதில் முதலும் இல்லை
முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு


வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா


ஆஹா... ஹா ஹா இரவைப்பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்துத் துவளாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகுத் தெரியாதே

கனவை நீயும் நம்பாதே கலைந்து போகும் மறவாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் 
கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்ததுபோனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு


வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விடியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா



பாடியவர்: ராகுல் நம்பியார்
படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா. முத்துக்குமார்

20100921

இறகைப்போலே ...


இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே

தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னைத்தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்

அநியாயக் காதல் வந்ததே
அடங்காத ஆசைத் தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டுச்சென்றதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே ஊன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே


கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்


ஹே என்னானதோ ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கம்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்ல
ஓ...ஹோ.. ஹோ.. ஹோ
என் மீதிலே உன் வாசனை எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே என்னை சேராமல் வாழ்வில்லை ஓ...ஹோ ஹோ
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓ...ஹோ ஹோ
நீ என்னைக் காண்பதே வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூரல் நெஞ்சில் சிந்துதே


கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்


பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா
படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: யுகபாரதி

20100920

ஒரு வார்த்தை மொழியாலே


ஒரு வார்த்தை மொழியாலே என்னை உருகவைத்தாள்
என்னை உருகவைத்தாள்
ஒரு பார்வை வழியாலே என்னை நெருங்கிவிட்டாள்
என்னை நெருங்கிவிட்டாள்

ஒரு மின்னல் இடி போலே என்னை துடிக்கவிட்டாள்
என்னை துடிக்கவிட்டாள்
ஒரு காதல் வார்த்தாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart

வெள்ளை வெள்ளையாய் இரவுகள்
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்
கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன்
அன்பே உன் காதலே

சின்ன சின்னதாய் ஆசைகள்
புத்தம் புதிதாய் கவிதைகள்
லட்சம் லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே

ஒரு சாரல் மழையாலே என்னை நனையவைத்தான்
என்னை நனையவைத்தான்
புயலாக உருவாகி என்னை வேரோடு சாய்த்து விட்டான்

He Stole My Heart
He Stole My Heart
He Stole My Heart
He Stole My Little Little Heart

நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்
உன்னை அதிலே நிறைக்கிறேன்
என்னை முழுதாய் மறக்கிறேன்
அன்பே உன் காதலாலே

உன்னை எண்ணியே வசிக்கிறேன்
என்னை அதனால் ரசிக்கிறேன்
தன்னந் தனியே மிதக்கிறேன்
அன்பே உன் செய்கையாலே

தலை கால்தான் புரியாமல் என்னை தவிக்கவைத்தாள்
என்னை தவிக்கவைத்தாள்
தலைக்கனமாய் நடந்தேதான்
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart

பாடியவர்கள்: ஷான், மேகா
படம்: சிங்கம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடல்: நா.முத்துக்குமார்.

20100919

சிங்கம், சிங்கம்....



Everybody Listen Listen Listen
Make Way For The King
Everybody Listen Listen Listen
Just Watch The Way He Is Gonna Swing. Alright

ஹேய் விண்ணை தீண்டும் கதிரவன்
எந்த எல்லை தாண்டும் காற்றிவன்
காட்டை எறிக்கும் நெருப்பிவன்
கைப் பட்டால் கொதிக்கும் நீர் இவன்

Everybody Listen He Is On A Mission
You Can Never Stop Him
He Is A Human Tornado
Everybody Listen He Has Got The Right Decision
You Cannot Mess With Him Not Even With His Shadow

சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்
இவன் நடந்தால் போதும் நிலமும் வணங்கும்
ஹேய் சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்
ஐம் பூதங்கள் யாவும் இவனுள் அடங்கும்

ஹேய் ரௌடிகளின் ராஜ்ஜியங்கள் ரணகளமாய் இருக்கும் இருக்கும்
காவல்துறை தேர்ந்தெடுத்து சிங்கத்தைதான் அனுப்பும் ஜெயிக்கும்
வீரம் அது இதுதானோ
சூரம் இரு விழிதானோ
தீரன் அது இவன்தானோ
மாயவனோ.....

பார்க்கும் அது படித்தானோ
காக்கும் இரு கைதானோ
நீக்கம் தனி வழிதானோ
நிரந்தர பயம் இவனோ......

சிங்கம் சிங்க He is துரை சிங்கம்
இவன் பார்த்தால் போதும் இடியும் இறங்கும்

வகை வகையாய் தவறு செய்யும் கயவர்களை அறிவான் அறிவான்
மிக மிகயாய் கலவரமா புகை எனவே நுழைவான் சுடுவான்
சுத்தம் இரு கைதானோ
ரத்தம் ஒரு மைதானோ
யுத்தம் அது மெய்தானோ
போர்க்களமோ......

சுற்றும் புவி இவன்தானோ
தட்டும் கடல் அலைதானோ
முற்றும் பகை அழிப்பானோ
மானிடன் அவன் இவனோ

சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்
Come On Yeah.....
இவன் நின்றால் போதும் நகரம் நடுங்கும்
சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்
இவன் கண்டால் போதும் அகரம் தொடங்கும்
சிங்கம்.....

பாடியவர்: தேவிஸ்ரீ பிரசாத்
படம்: சிங்கம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடல்: விவேகா

20100915

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி...



எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே இறைவன் கொடியவனே 

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே ஓ.. உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : விஸ்வநாதன்–ராமமூர்த்தி
படம்: புதிய பறவை
பாடல்: கவிஞர் கண்ணதாசன்

20100914

பொன்னை விரும்பும்...





பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே

தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே


பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே


பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே


பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே


ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே


பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே



பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: ஆலயமணி
பாடல்: கவிஞர் கண்ணதாசன்

20100913

ஆட்டுவித்தால் யாரொருவர்



ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் 
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா

பாடியவர்: டி.எம்.செளந்தர்ராஜன்
படம்: அவன் தான் மனிதன்.
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடல்: கவியரசு கண்ணதாசன்.

20100824

சொல்பேச்சு கேட்காத சுந்தரியே...



சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி

அவன் நல்லப்பையன் தானா
இல்லக் கெட்டப்பையன் தானா
தெரியலையேப் புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்
அவன் பேச்சில் சொக்கிப்பேனேன்
இருக்கண்ணில் சிக்கிப்போனேன்
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக் கேச்கப்போவேன்
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி

அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய் கொஞ்ச நாளாய்
கோபம் என்ன
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா நெறுப்பாக
எந்தன் காதல் அறியுதா
இது என்னக்காதலாலே கூடுவிட்டுப் பாய்கிறாயே
விழியோடு என் உருவம் தெரியுதா
புதிதாக ஒரு உலகம் விரியுதா

பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன்
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் என்பானவன்
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ
எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே
ஐயய்யோ ஆதிமூலம் தந்தாயோ
ஏமாந்துப்போகாதே ஏமாத்திப்போகாதே
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி

அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும்
அவன் பூ தான்
நெஞ்சை அள்ளித் தூக்கிக்கொண்டுப்போகும்
அவன் ஞாபகம் காத்தாடிப் போலத்தான்
கண் முன்னேப் பறப்பானே
பெண்ணே நீ இவனை விட்டுப்போகாதே
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே
ஏமாந்துப்போனேனே ஏமாத்திப்போனாயே
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி


பாடியவர்கள்: சித்ரா, ஷ்ரேயா கோஷல், யுவன் ஷங்கர் ராஜா
படம்: தில்லாலங்கடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா. முத்துக்குமார்

20100818

கிளிமாஞ்சாரோ ...

கிளிமாஞ்சாரோ 



கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டியப் புடிய்யா
சுக்குமிள்கு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடிய்யா

ஏவாளுக்குத்
தங்கச்சியே யெங்கூடத்தான்
இருக்கா

ஆளுயற ஆலிவ்பழம்
அப்படியே எனக்கா?

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ...நீ

கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

கொடி பச்சையே 
எலுமிச்சையே
உன்மேல் உன்மேல் 
உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை 
ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை!

இனிச்சக்கீரே 
அடிச்சக்கரே
மனச ரெண்டா ஓஹோ 
மடிச்சுக்கிரே 

நான் ஊற வைத்தக்
கனி - என்னை மெல்ல
ஆற வைத்துக் கடி!

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் - நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு - ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்!

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ..நீ


கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி எனைவாசியே

நீ தோல்குத்தாத பலா -  றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா

ஆங்..மரதேகம் நாம் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில்வாசம் நீ

நீ நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
யாரு நான்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சைப் பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

அக்கக்கோ - நான் கின்னிக்கோழி
அப்பப்போ - என்னெப்
பின்னிக்கோ நீ
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோ நீ

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ நீ


பாடியவர்கள் : ஜாவித் அலி,சின்மையி
படம்: எந்திரன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல் : பா.விஜய்