Showing posts with label santhosh subramaniam. Show all posts
Showing posts with label santhosh subramaniam. Show all posts

20100226

அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் ...





அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்



நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்தபோது
எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்





ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் ஏங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்


பாடியவர்: சித்தார்த்
படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்

20100225

காதலுக்கு கண்கள் இல்லை ...



காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதென்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்....
லூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே
பீச்சில் வந்து சுண்டல் தீர்ந்து போச்சு என்றாலே
காதல் கூட தீரும் என்றேன் நானே
ஒ ஒ ஒ என்ன ஆனதோ ஹார்மோன்கள் கொஞ்சம் மாறுதோ
ஒ ஒ ஒ எந்த நாள் முதல் என் காதல் அவள் ராகத்தில்
(காதலுக்கு...)

அப்பன் காசெல்லாம் செல் போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
தன்னந் தனிமையிலே தானே பேசையிலே
நைட் அடிச்ச மப்பு இன்னும் இறங்கல என்றேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதல் என்னை என்ன செய்யும்
ஓவர் திமிரில் அழைந்தேன் நானே
நானும் இன்று கியூவில் நின்று
இதயத்தை பறி கொடுத்தேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு..)

ஓ கண்ணில் நுழைவாளாம் நெஞ்சில் நுழைவாளாம்
ஏண்டா இந்த பில்டப் என்று கூலா கேட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்து பார்க்க ஆசை பட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்,,,
கோடிப் பொய்கள் கட்டிய மூட்டை 
காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக 
மெய்யினில் உணர்ந்து கொண்டேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு...)


பாடியவர்: தேவிஸ்ரீ பிரசாத்
படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்