Showing posts with label சிவாஜி. Show all posts
Showing posts with label சிவாஜி. Show all posts

20091202

சூரியனோ சந்திரனோ...






சூரியனோ சந்திரனோ யாரிவனோ
சட்டுன்னு சொல்லு
சேரப் பாண்டிய சூரன் இவனோ
சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு

(சூரியனோ )

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கெட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ


பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா




காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
தாவணிப் பெண்களும் தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா?
நம்ம களத்துமேடு கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு

சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி
படுப்படு படுவென போர்த்திய புல்வெளி
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி
சுடச்சுடச் சுடச்சுட கிடைக்கிற இட்லி
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி
கடகட கடவென கடக்கிற காவிரி
விறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை
முறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்

(சூரியனோ சந்திரனோ)

ஏலேலே கிராமத்துக் குடிசையில கொஞ்ச காலம் தங்கிப் பாருலே
கூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிப் பாருலே
கூவும் செல்போனின் நச்சரிப்பை அணைத்து
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்!

ஆலமரத்துக்கு ஜடைகள் பின்னித்தான் பூக்கள் வைக்கலாமே
ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமே


( ஏ பல்லேலக்கா )


ஏலேலே அஞ்சறைப் பெட்டியிலே ஆத்தாவோட ருசியிருக்கும்
அம்மியில் அரைச்சு ஆக்கி வெச்ச நாட்டுக்கோழி பட்டைக் கெளப்பும்

ஏலே ஆடு மாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்
மண்ணு எங்கும் வீசும்


பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்
பங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்


( ஏ பல்லேலக்கா )

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரைஹானா, பென்னி
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: நா.முத்துக்குமார்
படம்: சிவாஜி

20091201

சகானா சாரால் தூவுதோ







சகானா சாரால் தூவுதோ
சகாரா பூக்கள் பூத்ததோ

சகாரா பூக்கள் பூத்ததோ
சகானா சாரால் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ – அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேனீர் கொண்டதோ

கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சகாரா பூக்கள் பூத்ததோ
சகானா சாரால் தூவுதோ

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு

உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு

பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களால் நிரப்பட்டுமா

பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்குள் நடக்கட்டுமா

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது


பாடியவர்கள்:
படம்: சிவாஜி
இசை: ஏ.ஆர்.ரகுமான்.








ஆம்பல் ஆம்பல்...



ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்
ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்

உன் பூவிழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி

அன்பால் பார்வையிடு அழகை சாவியிடு
உன் ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு

வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்

ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன் நிலவே ஒரு நிலவுடன்தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்

புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனா
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனா
விடியும்வரை மார்புக்குள் இருப்பேனா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேனா

ஓ பெண்களிடம் சொல்வது குறைவு
செய்வது அதிகம் செயல்புயல் நானடி

வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்

பொன்வாக்கியமே வாய்வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்துகொண்டேன் சுகம்சுகம் கண்டேன்

ஆனந்தவெறியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி
வெண்ணிலவை சகதியும் ஆக்கி விட்டேன்

அடடடா குமரியின் வரங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ

வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி

ஓ பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்

உன் பூவிழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்
ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்

பாடியவர் : ஹரிஹரன், மதுஸ்ரீ
படம் : சிவாஜி
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
கவிஞர் : வைரமுத்து