20100128

ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில் ...







ஆஹா.. அடடா
பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய்
கண்டேன் ஹேய்
ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும்
என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒ..ஹோ
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன்
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு
உன் பார்வை நீ
நகர்த்திடும் பகலை இரவை
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர
புல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே
அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே


பாடியவர்கள்: பென்னி தயால், கல்யாணி மேனன்
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடல்: தாமரை

கடலினில் மீனாக இருந்தவள் நான்...




கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா


கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ... ஓ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓ..டும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்..ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்-ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்-அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
கூவினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ... ஓ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

பாடியவர்கள்: AR ரஹ்மான், ஷ்ரேயா கோஷல்
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடல்: தாமரை

20100126

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...

’பத்ம பூஷண்’ விருது பெற்ற 
ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்துகள்




எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் 
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் 
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு 
இது போல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு 
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...

பாடியவர்: ஸ்வர்ணலதா
படம்: அலைபாயுதே
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து



என் மன வானில்...



என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால்
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

கலகலகலவென துள்ளி குதிக்கும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால்
உங்கள் துள்ளல் தானாய் அடங்கிவிடும்

உங்களை போலே சிறகுகள் விரிக்க
நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து
தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே
இதயம் தாங்குமோ நீ கூறு

என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால்
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்



இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்கள் அவனே கொடுத்தான்
மனிதத்தில் இதை யாரும் அறிவாரோ
நான் பாடும் பாடல் எல்லாம்
நான் பட்ட பாடே என்றோ
பூமியில் இதை யாரும் உணர்வாரோ
மனதிலே மாளிகை வாசம்
கிடைத்ததோ மணல் நிலம் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை
இங்கே ராகம் உண்டு தாளம் உண்டு
என்னை நானே கட்டிக்கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு
வேறென்ன வேண்டும்

என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால்
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்



பொருளுக்காய் பாட்டை சொன்னார்
பொருளற்ற பாட்டே ஆகும்
வாடினேன் அதை நாடும் நானும்
பொதுவிலே பாட்டானாலும்
பொருளையே போட்டு செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னை பார்ப்பார்
மனதினால் அவரை பார்ப்பேன்
மறந்திடா ராகம் இதுதானே
வாழ்க்கை என்னும் மேடைதனில்
நாடகங்கள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும்
பார்வை இன்றி

என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால்
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்



பாடியவர்: ஹரிஹரன்
படம்: காசி
இசை: இளையராஜா

20100125

கல்யாண மாலை...




கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
(கல்யாண மாலை..)


வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..
(கல்யாண மாலை..)


கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
(கல்யாண மாலை..)


பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
பாடல்: வாலி

முதன் முதலில் பார்த்தேன்...




முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே

நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்


நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்

முதற்பார்வை நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே உயிர் வாழுமே

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே

உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி உன்னில்

உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்

என் சுவாசக் காற்றில் எல்லாம்
உன் ஞாபகம்.. உன் ஞாபகம்

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

படம்: ஆஹா

20100119

அதிரி புதிரி பண்ணிக்கடா...




அழைச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னைதான்
எப்போதுமே ஒன்னா நீ என்னைதான்

அதிரி புதிரி பண்ணிக்கடா
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாததும் தொட்டுக்கடா
கண்களை தொட்டதும் கற்பு பதறுதே
உன் கையால் நீ தொட்டாய்
கன்னி மொட்டுக்குள்ள
டொட்டொயிங் டொட்டொயிங்

அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிரி எகிரி விழட்டுமா
பின் அழகை பின்னட்டுமா
பிச்சி பிச்சி தின்னட்டுமா
காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டாய்
என் முதுகு தண்டுக்குள்ளே
டொட்டொயிங் டொட்டொயிங்

ரெண்டு பேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால்
எத்தனை நாள் திண்ண இட்லி வடை சாம்பார்

முக்கனியில் ரெண்டு கனி முட்டி திங்க ஆசை
அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோசை

பணைய கைதிய போல என்னைய ஆட்டி படைக்குற
பங்கு சந்தைய போல என்னை ஏத்தி இறக்குற

ஹேய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற
கத்தி கண்ணு வத்தி வெச்ச என் உச்சி மண்டையில
டொட்டொயிங், டொட்டொயிங்

டொட்டொயிங்
டொட்டொயிங்
டொட்டொயிங்

பச்ச புள்ள போல் இருப்பா லட்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வெச்சதென்ன முந்திரிக்கா தோப்பா

கத்திரிக்கா மூட்ட போல கட்டழகு சீப்பா
உரம் போட்டு வளர்த்ததப்பா பொத்திகிட்டுப் போப்பா

ஏப்ரல் மாத ஏரி போல ஹார்ட்டு இறங்குதே
தங்கம் வெலைய போல சும்மா சத்து ஏறுதே

புத்தியில் எப்பவும் நண்டு ஊருதே
பச்சு பச்சு இச்சு வெச்சா நரம்பு மண்டலத்தில்
டொட்டொயிங் டொட்டொயிங்

அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிரி எகிரி விழட்டுமா
பின் அழகை பின்னட்டுமா
பிச்சி பிச்சி தின்னட்டுமா
காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டாய்
என் முதுகு தண்டுக்குள்ளே
டொட்டொயிங் டொட்டொயிங்
டொட்டொயிங் டொட்டொயிங்
டொட்...டொ...யிங்...


பாடியவர்கள்: ஜனனி, முகேஷ்
படம்: அசல்
இசை: பரத்வாஜ்

ஏழேழு தலைமுறைக்கும் ...



ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணைபுரம்
ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணைபுரம்
முல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம்
எல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம்
(ஏழேழு..)

வீரப்பாண்டி மாரியம்மா எங்குமுள்ள காளியம்மா
தாய் சீல காரியம்மா தந்தா மங்களம்மா
பாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு
கூட்டி எடுத்துத் தந்த பாட்டு பொங்குதம்மா
பட்டிக்காட்ட விட்டுப்புட்டு பட்டணத்தில் குடி புகுந்து
மெட்டுகளை கட்டி தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு
ஆத்தி என்ன சொல்ல
அன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு

அப்பருந்து இப்ப வர எங்களுக்கு என்ன குறை
எப்போழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை

ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணைபுரம்

அள்ளி உரலுல நெல்ல போட்டு
அழுத்தி அழுத்தி குத்துங்கடி
அத்த மகனைத்தான் பாத்துக்கிட்டு
அமுக்கி புடிச்சு குத்துங்கடி
நம்ம நெல்லு குத்துகிற அழகைக் கண்டு
மச்சான் நேருல வர்றத பாருங்கடி
அவன் நேருல வர்றத பார்த்துப்புட்டு
நம்ம நெஞ்சு துடிக்குது கேளுங்கடி

மேத்து மழை சாரலிலே மேஞ்சு வந்த மேகம் எல்லாம்
கோர்த்து தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேட்கும்

நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது
ஊர் அறிய கேட்கும்போது உற்சாகமா தோணும்

அப்பனோட அறிவிருக்கு அன்னையோட அரவணைப்பு
சத்தியமா நிச்சயமா அஸ்திவாரம் எங்களுக்கு
தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு

வயலுல வெளஞ்ச நெல்லு நகரத்த தேடி வந்து
பசிகளை தீர்ப்பதுப்போல் பாரு எங்க கதை
ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணைபுரம்
முல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம்
எல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம்
ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணைபுரம்

பாடியவர்கள்: பவதாரினி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன்
படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: கங்கை அமரன்

அராபியன் சீ கோவா...




Hey I Swear
Chynk Show
will play
fly like a bird


அராபியன் சீ கோவா
அழகை ரசி கோவா
ஆஹா குஷி கோவா
ஆல்வேய்ஸ் பிஸி
நம் ஆசைப்படி கோவா
வாசப்படி கோவா
தொட்டு வெற்றி கொடி
தட்டி ஹேட்ரிக் அடி


ஹிப்பிஸ் எல்லாம்
தம் அடிக்கிற ஊர் தானே கோவா
டூ பீஸ் எல்லாம்
ஸ்விம் அடிக்கிற ஊர் தானே கோவா
ஹாலி சேர்ச்
வான் இடிக்கிற ஊர் தானே கோவா
பெலிசியன் பேர்ட்ஸ்
மீன் பிடிக்கிற ஊர் தானே கோவா
போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது
ஓ ஹேய் ஓ ஹேய் 
கேட்ட பூ மாலை தோழா நம் தோள் வந்தது 
ஓ ஹேய் ஓ ஹேய்
அராபியன் சீ கோவா
அழகை ரசி கோவா
ஆஹா குஷி கோவா
ஆல்வேய்ஸ் பிஸி
நம் ஆசைப்படி கோவா
வாசப்படி கோவா
தொட்டு வெற்றி கொடி
தட்டி ஹேட்ரிக் அடி


fly like a butterfly
sting like a bee
I'll leave for the sky
the one who want's to be
hey body's shakin
let me fly through the land
you're lookin like Archie
heart, feel and soul
international
see I've got to grab my cash note
gotta pick my flight rationalle
goa
I'll be so high in that plane
when I just stare I'll pick that brain
three quarter crore people thinkin that I am strange
got the body for the chance
but I'm gettin that change in me
relax on the beach now we've gotta little feather
you're my jack on the beach
join the breeze in the palm trees
we're standing there looking at the brown trees



தடாவும் பொடாவும் நம் வீட்டிற்க்குள் நிற்காதடா
கனாவும் வினாவும் நம் கண் விட்டு போகாதடா
ஹ ஹ ஹ..
கோ என்பது முன் வார்த்தைதான்
வா என்பது பின் வார்த்தைதான்
கோ என்றது துன்பங்களை
வா என்பது இன்பங்களை
அராபியன் சீ கோவா
அழகை ரசி கோவா
ஆஹா குஷி கோவா
ஆல்வேய்ஸ் பிஸி
நம் ஆசைப்படி கோவா
வாசப்படி கோவா
தொட்டு வெற்றி கொடி
தட்டி ஹேட்ரிக் அடி


when you're comin to goa
got to get that girl
we party we party
we twist and touch
no freaks all around me kiss
chynk show tyme
I'm man again no chicks
so
look at her
got her eyes on her wrists
so they can't be faint
when I also grip
I roll up
swag dee scroll up
...
I'm swearing baby now with
now I'm in town
crazy down with
have a good trip
and buy another phone with
I'm all over me and
got another Jim cove me
t-bone and I freak
by the surface
give money here
and reek out the purchase


கோவா கோவா கோவா
கோ கோ கோவா தொட்டு
கோ கோ கோ தட்டி
கோ கோ கோவா


போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது
கேட்ட பா மாலை தோழா நம் தோள் வந்தது
அராபியன் சீ கோவா
அழகை ரசி கோவா
ஆஹா குஷி கோவா
ஆல்வேய்ஸ் பிஸி
நம் ஆசைப்படி கோவா
வாசப்படி கோவா
தொட்டு வெற்றி கொடி
தட்டி ஹேட்ரிக் அடி


பாடியவர்கள்: தான்வி, சுசித்ரா, ரஞ்சித், கிரீஷ், 
படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

இதுவரை இல்லாத உணர்விது...


இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ


இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே


மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்

இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே


மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே


தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே


பாடியவர்கள்: அஜீஷ், ஆண்ரியா
படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: கங்கை அமரன்




இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாக்கும் நினைவிது
மனதினை மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே

காதல் என்றால் அத்தனையும் கனவு
கண் மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால் ஆணை கொல்லும்
நோய் ஆனதே

ஐயோ இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுப்புள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியம் ஆக்கும்
பெண்ணை தேடி தொலையாதே



பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் கங்கை அமரன்

20100110

ஆரிய உதடுகள் உன்னது...





ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்தப் போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
(ஆரிய..)

இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மனக் கிடங்குகள் தீப்பற்றித் தித்திக்கணும்

எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிகப் பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
ராத்திரியின் பூரணமா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா



ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனகலிடும் ஒலிப்பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம் களைந்த பின்னே பின்னே
களையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்

என் நாயகா எனைப் பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா
கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா
(ஆரிய..)

தேவதை புன்னகை செய்தால்
சிறு தேப்பிறை முழு நிலவாகும்
குறைகுடமாய் நானிருந்தேன்
நிறைகுடமாய் ஏன் நிறைந்தேன்
உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்

ஜீவித நதியென விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்
பெண்ணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்

அடி காற்றினிலே வான் நிறையுது
நம் காதலால் உயிர் நிறையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்னத்தான் எதிர்ப்பார்க்கிறாய்
ஜீவனின் மையம் தேடி
கைகள் மீண்டும் வருமா?
(ஆரிய..)



பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்வர்ணலதா
படம்: செல்லமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்





20100109

ஓ பேபி நீ தேவாமிர்தம்...



ஓ பேபி நீ தேவாமிர்தம்
பேபி நீ பஞ்சாமிர்தம்
பேபி நீ புஷ்பத்தாவரம்

ஓ பேபி நீ தீபாவளி
பேபி நீ சூராவளி
பேபி நீ வாச மார்கழி

அம்மாடி அவ பாதம் பட்டா பாற பூவாகும்
அப்பாடி அவ கையி பட்டா நீரும் சாராயம்
ஐயோடி அவ என்ன என்ன தொட்டா
என்னாகும் என்னாகும்
(ஓ பேபி..)

ஏ ஆலமர காக்கா அவ சோறு வைக்க ஏங்கும்
ஏ ஓடக்கரை மீனு அவ கால கொத்த ஏங்கும்
ஏ காஞ்சிபட்டுச் சேல அவ கட்டிக் கொள்ள ஏங்கும்
ஏ நாகலிங்க பூவு அவ வாசத்துக்கு ஏங்கும்

சோல காத்தாடியா செவத்தப்புள்ள நின்னாடா
செத்துப்போன எல்லாருமே திரும்பி வந்தாண்டா
காதல் பூசாரியா கனவு பூச செஞ்சாடா
கல் விழுந்த கொளத்த போல அலம்ப வச்சாடா
(அம்மாடி..)

நான் காலமெல்லாம் வாழ அவ கண்ணழகு போதும்
என் ஆசை எல்லாம் பேச அவ காதழகு போதும்
நான் தாலிக்கட்டும் போது அவ தல குனிஞ்சா போதும்
நான் நாலுபுள்ள கேக்க அவ நெகங்கடிச்சா போதும்

ஊத்துத் தண்ணீரா உள்ளுக்குள்ள பூத்தாடா
உலகெல்லாம் அவதான்னு உணர வச்சாடா
காத்து கருப்பாட்டம் கண்ணோட சேர்ந்தாடா
கனவுக்குள்ள ஸ்ரீதேவியா கதபடிச்சாடா
(அம்மாடி..)



பாடியவர்கள்: ராகுல் நம்பியார், சங்கீதா
படம்: மலைக்கோட்டை
இசை: மணிஷர்மா


20100108

ஆப்பிள் பெண்ணே ...





ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ...
பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
என்ன நீ பார்க்கவில்லை 
என் உயிர் நொந்ததடி
பென்ணே நீ போன வழியில் 
என் உயிர் போனதடி
எங்கோ ஓர் சாலை வளைவில் 
உன் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு 
என் உயிர் தேம்புதடி

மின்னல் கண்டு கண்களை மூடி 
கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள 
ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி 
எங்கே விழுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ 
இதுவரை ஏதும் தகவலில்லை
அழகே உன்னை காணாமல் 
அன்னம் தண்ணீர் தொடமாட்டேன்
ஆகாயத்தில் மறுபக்கம் சென்றால் கூட
விடமாட்டேன்
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்

பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால் 
லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் ஐயோ பைத்தியம் என்று 
பார்வையாலே கொல்வாயா
உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் 
அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் தந்தால் 
ஓகே என்று சொல்வாயா
ஆமாம் என்று சொல்லிவிட்டால் 
ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால் 
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் 
மீண்டும் காதலிப்பேன்..





பாடியவர் : ஸ்ரீநிவாஸ்

படம் : ரோஜா கூட்டம்
இசை : பரத்வாஜ்

ஓ வெண்ணிலா இரு வானிலா...




ஓ வெண்ணிலா இரு வானிலா

ஓ நண்பனே அறியாமலா

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா..)

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா..)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா..)


பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்

என்னை காணவில்லையே...



அன்பே..

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வாஎன் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித்தான்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் நான்..
(என்னை காணவில்லையே..)

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் இந்த காதலென்றால்
(என்னை காணவில்லையே..)


பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ராஃபி, OS அருண்
படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்

20100106

உயிரின் உயிரே ...




உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக என்னை வாரிக்கொண்டாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அணைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின்..)

சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன்
வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே
தொலைந்து போவேனே நான் நான் நான்..
(உயிரின்..)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ
விரல்கள் தாராயோ நீ நீ நீ..
(உயிரின்..)


பாடியவர்கள்: கேகே, சுசித்ரா
படம்: காக்க காக்க
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

மின்னல் ஒரு கோடி ...




மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ.. லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே

(மின்னல் ஒரு கோடி.....)

குளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினாய் நான் மழையாகினேன்
நீ வாடினாய் என் உயிர் தேடினேன்

நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை தேன் வார்த்ததே

மழையில் நனையும் பனி மலரைப் போலே
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்

(மின்னல் ஒரு கோடி.....)


பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா

படம்: வி.ஐ.பி
இசை: ரஞ்சித் பரோத்

நீயில்லை நிழலில்லை...




நீயில்லை நிழலில்லை
நிழல் கூட துணையில்லை

நீயில்லை நிழலில்லை
நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்
(நீயில்லை..)

உன் பேரை நான் எழுதி
என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி
உன்னில்தான் சந்தித்தேன்
காதலே காதலே
ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா
சொல் சொல்
(நீயில்லை..)

பகலின்றி வாழ்ந்திருந்தேன்
சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன்
வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய்
வாடவும் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா
சொல் சொல்
(நீயில்லை..)


பாடியவர்: ஹரிஹரன்
படம்: பூச்சூடவா
இசை: சிற்பி

இருபது கோடி நிலவுகள்...




இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ

நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..
(இருபது..)

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ
மானிடப் பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ
(இருபது..)

ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மேனி கொண்ட கன்னம் மின்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ
(இருபது..)



பாடியவர்: ஹரிஹரன்
படம் :துள்ளாத மனமும் துள்ளும்
இசை :SA ராஜ்குமார்
பாடல்:வைரமுத்து