Showing posts with label புவனா ஒரு கேள்விக்குறி. Show all posts
Showing posts with label புவனா ஒரு கேள்விக்குறி. Show all posts

20101229

விழியிலே மலர்ந்தது ...



விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

உன் நினைவே போதுமடி 
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும் 
பொன் விளக்கே தீபமே 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் 
ஓரழகைக் கண்டதில்லையே 

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் 
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி 
கண்களுக்கு விளைந்த மாங்கனி 
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 

கையளவு பழுத்த மாதுளை பாலில் 
நெய்யளவு பரந்த புன்னகை 
கையளவு பழுத்த மாதுளை பாலில் 
நெய்யளவு பரந்த புன்னகை 
முன்னழகில் காமினி 
பின்னழகில் மோகினி 
மோக மழை தூவும் மேகமே 
யோகம் வரப் பாடும் ராகமே 

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது 
பெண்ணென்னும் பொன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே அடடா 
எங்கெங்கும் உன்னழகே 
எங்கெங்கும் உன்னழகே 


பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம். 
படம்: புவனா ஒரு கேள்விக்குறி
இசை : இளையராஜா 
பாடல்: பஞ்சு அருணாசலம்