20091215

கொடியிலே மல்லியப்பூ...







ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
      பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
      நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே



பெ: மனசு தடுமாறும் அது நெனச்சா நெறம்மாறும்
      மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடைபோடும்

ஆ: நித்தம் நித்தம் ஒன்நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
     மாடுரெண்டு பாதைரெண்டு வண்டிஎங்கே சேரும்

பெ: பொத்திவச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்புஇல்ல
      சொல்லத்தானே தெம்புஇல்ல இந்தத்துன்பம் யாரால



ஆ: பறக்கும் திசைஏது இந்தப் பறவை அறியாது
      ஒறவும் தெரியாது அது ஒனக்கும் புரியாது

பெ: பாறையில பூமொளச்சுப் பாத்தவுக யாரு
      அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு

ஆ: காலம் வரும் வேளையில காத்திருப்பேன் பொன்மயிலே

பெ: தேதிவரும் உண்மையிலே சேதிசொல்வேன் கண்ணாலே


பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே..
       கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
       பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
       நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
       எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே


பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி
படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா


0 comments:

Post a Comment