20100108

ஆப்பிள் பெண்ணே ...





ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ...
பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
என்ன நீ பார்க்கவில்லை 
என் உயிர் நொந்ததடி
பென்ணே நீ போன வழியில் 
என் உயிர் போனதடி
எங்கோ ஓர் சாலை வளைவில் 
உன் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு 
என் உயிர் தேம்புதடி

மின்னல் கண்டு கண்களை மூடி 
கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள 
ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி 
எங்கே விழுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ 
இதுவரை ஏதும் தகவலில்லை
அழகே உன்னை காணாமல் 
அன்னம் தண்ணீர் தொடமாட்டேன்
ஆகாயத்தில் மறுபக்கம் சென்றால் கூட
விடமாட்டேன்
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்

பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால் 
லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் ஐயோ பைத்தியம் என்று 
பார்வையாலே கொல்வாயா
உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் 
அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் தந்தால் 
ஓகே என்று சொல்வாயா
ஆமாம் என்று சொல்லிவிட்டால் 
ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால் 
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் 
மீண்டும் காதலிப்பேன்..





பாடியவர் : ஸ்ரீநிவாஸ்

படம் : ரோஜா கூட்டம்
இசை : பரத்வாஜ்

0 comments:

Post a Comment