20100216

யாரடி நீ யாரடி ...



யாரடி 
நீ யாரடி
சொல்லடி 
நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்

உன் விழி என் விழி இணைய வேண்டுமே
கைகளில் காதலை வழங்க வேண்டுமே
வறண்டு கிடக்கும் இவன் நெஞ்சிலே
துளி நீர் தெளி
ஈரங்கள் சுமந்து வரும் வான்வெளி
என் காதலி என் காதலி

போனதே உயிர் போனதே

உன் முகம் பார்த்து நான் சிவந்து போகிறேன்
உன் விழி பார்த்து நான் மயக்கம் ஆகிறேன்
மழையும் வெயிலும் இவன் கண்களில் 
தினம் பார்க்கிறேன்
புயலும் இசையும் இவன் மூச்சிலே
உண்டானதால் திண்டாடுறேன்

யாரடி 
நீ யாரடி
சொல்லடி 
நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்

பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல்
படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்

0 comments:

Post a Comment