20100203

முதல் முறை இவன்...



முதல் முறை இவன் உயிருக்குள் மாற்றம்
இனம் புரியா அவஸ்தையின் கூட்டம்
எதிரினில் ஒரு அழகிய தோட்டம்
ஜாடை காட்டும் ஜாடை காட்டும்
இடம் தடம் இவன் மறந்தான் மறந்தான்
இவள் முகம் கண்டு கரைந்தான் கரைந்தான்
சுகத்தில் விண்வெளியில் மிதந்தான்
உரைந்தான் உடைந்தான்

இன்றே இன்றே உன்னால் இங்கே
முழுதாய் நானும் புதிதானேன்
அடை மழை போலே உன் அழகாலே
உயிர் வரை நானும் நனைகின்றேன்
பெண்ணே உன் கண்ணில் சிக்கிக்கொண்டேன்
தப்பிக்கத் தானே
நான் மறந்தேன் ஏன் மறந்தேன்
நதி மீது நகரும் இலையை போலே
அன்பே நான் மிதந்தேன்
உனக்குள் நான் 
விழுந்தேன் தொலைந்தேன் 
புதிதாய் பிறந்தேன்

முதல் முறை இவன் உயிருக்குள் மாற்றம்
இனம் புரியா அவஸ்தையின் கூட்டம்
எதிரினில் ஒரு அழகிய தோட்டம்
ஜாடை காட்டும் ஜாடை காட்டும்
இடம் தடம் இவன் மறந்தான் மறந்தான்
இவள் முகம் கண்டு கரைந்தான் கரைந்தான்
சுகத்தில் விண்வெளியில் மிதந்தான்
உரைந்தான் உடைந்தான்

இன்றே இன்றே உன்னால் இங்கே
என்னுள் ஏதோ பரவசமே
முதலெது தெரியா முடிவெது புரியா
நிலையும் மாறி உன் வசமே
சொன்னாலும் கேட்காமல் என் நெஞ்சம்
உனைச் சுற்றித் திரியும்
அதை ரசிப்பேன்
அன்பை தேடி
நான் ஏன் கால்கள் மாறிப் போனேன்
பதிலெதும் இல்லை
என்னிடம்தான்
இருந்தும் தொடர்ந்தேன்
சிறகை உணர்ந்தேன்.

இன்றே இன்றே இன்றே இன்றே
இன்றே இன்றே இன்றே இன்றே
ஒ...ஒ...
இன்றே இன்றே இன்றே இன்றே

பாடியவர்கள்: ரஞ்சித், சுசித்ரா
படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடல்: பிரியன்

0 comments:

Post a Comment