20111026

யம்மா யம்மா காதல் பொன்னம்மா...



யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ணு ரெண்டை திருடிப் போனாளே
புல்லாங்குழலை கையில் தந்தாளே
என் முச்சுக் காத்தை வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி
கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்
இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா
உன் மூச்சடங்கும் தன்னால்
காதல் முத்தெடுத்த பின்னால்
மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கையவிட்டுதான் போயாச்சு
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணாப் போச்சு
காதல் பாதை கல்லு முள்ளுடா
அதை கடந்து போன ஆளே இல்லைடா
காதல் ஒரு போதை மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா

ஓட்டை போட்ட முங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனது யாரு
ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போறன் பாரு
அவன் பூவு இல்ல நாரு
என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்பைப் போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே
வானாவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக் கட்டி கூட்டிப் போங்கடா

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சனே
என் கண்ணு ரெண்டைத் திருடிப் போனாளே
புல்லங்குழலை கையில் தந்தாளே
என் முச்சுக் காத்தை வாங்கிப் போனாளே 

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஸ்வேதாமேனன்.
படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: கபிலன்

0 comments:

Post a Comment