20100813

இவன் பேரைச் சொன்னதும்...

இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்




இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா

உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா



ராஜாத்தி உலோகத்தில்
ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அணையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால் சும்மா விடுமா

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே

ராட்ஷசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே

நான் மனிதன் அல்ல
அஃறிணையின் அரசன் நான்
காமுற்ற கணிணி நான்
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்

எந்திரன்... எந்திரன்
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே

வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை
ரோபோவைப் போ...போ..வென்னாதே

ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா

எந்திரன்... எந்திரன்
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா

படம்: எந்திரன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
பாடல்: வைரமுத்து

0 comments:

Post a Comment