20110708

ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா...




ஹே... ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி... அடி ஆத்தி என் கண்ணுல... என் கண்ணுல
சில நாளா... சில நாளா அவ தெரியல... அவ தெரியல
வேறேதும் நா பாக்கல வாழவே இப்ப பிடிக்கல
வருவா அவ வருவா எனை தாலாட்ட

ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்டதான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

ஹேய் ஆணாய் நான் வந்ததும்
அடி பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும்
அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானது
யார் வந்து தடுத்தாலும்
என் வாழ்வின் எதிர்காலம் நீ தானடி
கண் மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீதானே
இறந்தாலும் இறக்காதது இந்த காதலே
புரியாதது புதிரானது
அழிந்தாலுமே அழியாதது நிலையானது

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்டதான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்டதான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

பாடியவர் : ஹரிசரன்
படம் : அவன் இவன் 
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் : நா. முத்துக்குமார்

0 comments:

Post a Comment